தமிழீழ விடுதலை புலிகளுக்கான நிதி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் கீழ் சிவப்பு பிடியாணையையும், பிடியாணையையும் பிறப்பிக்கப்பட்டிருந்த எமில் காந்தனின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விசேட நீதிமன்ற நீதிபதி ஐராங்கணி பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இந்த வழக்கு விசாரணைகளில் பிரசன்னமாகி சாட்சியமளிக்க எந்த வேளையிலும் எமில் காந்தன் தயாராகவுள்ளார் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
எனினும், எமில் காந்தனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு பிடியாணையையும், பிடியாணையையும் பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால், அவரால் நாட்டிற்கு வருகைத் தந்து சாட்சியமளிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் அவரது சட்டத்தரணி விசேட நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், எமில் காந்தனுக்கு எதிராக சிவப்பு பிடியாணையையும், பிடியாணையையும் ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் நிதி கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்தில் பிரதான இடத்தை எமில் காந்தன் வகித்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.