எம்பிலிப்பிட்டி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

261

எம்பிலிப்பிட்டி குடும்பஸ்தர் கொலையை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம்(13) இடம்பெற்றுள்ளது.எம்பிலிப்பிட்டி பகுதியில் விருந்து ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையில் அங்கு சென்ற குறித்த பொலிஸ் அதிகாரி விருந்து இடம்பெற்றுக்கொண்டிருந்த வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட முறுகலில் அவரை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. இந்த மரணத்தின் பின் இடம்பெற்ற பல ஆர்ப்பாட்டங்களை அடுத்து உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன் எம்பிலிப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாகரி சுகவீனம் காரணமாக எம்பிலிப்பிட்டியவில் உள்ள தமது வீட்டுக்கு வந்திருந்தபோது இனந்தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் குழுவில் இராணுவ வீரர் ஒருவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE