எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு:

116

 

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம்
இந்த சம்பவம் வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நேற்றிரவு(24) இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நால்வரே வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணை
மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் தப்பி சென்றுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE