தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தேசியத் தலைவர் பிரபாகரன் நடாத்திய பொங்கு தமிழுக்குப் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் புதுக்குடியிருப்பில் நடாத்திய முத்தமிழ் விழாவிற்கு அடுத்தபடியாக, யாழ் முற்றவெளியில் எழுக தமிழ் பேரணி களைகட்டியது. இதில் தமி ழரசுக்கட்சியும் பங்குபற்றியிருந்தால் தமிழ் மக்களின் ஒற்றுமையினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கலாம். சிவபூசைக்குள் கரடி நுழைந்ததுபோன்று டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் எழுக தமிழ் பேரணியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு அவர் பல காரணங்களைக் கூறி னாலும் 2000இற்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் தனியாக எழுக தமிழ் பேரணியை நடாத்திச்சென்றுள்ளனர். தமிழினத்திற்குள் ஒற்றுமை இல்லை என்பதையே இவ்விடயம் காட்டுகின்றது.
ஆரம்பத்தில் ஈ.பி.டி.பி இந்நிகழ்வில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தபோதிலும் அதனை ஆதரிப்பதாக கருத்துக்களை வெளியிட்டபோதிலும் எமக்கான கௌரவம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் டக்ளஸ் அவர்கள் தனது சகாக்களை தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்குசெய்யப்பட்ட எழுக தமிழ் பேரணிக்குச் செல்லவிடாது தான் ஒன்றை நடாத்திமுடித்துள்ளார். இது இவ்வாறிருக்க மீண்டும் ஒரு எழுச்சியை யாழில் ஏற்படுத்தியமையின் ஊடாக அரசிற்கு பல்வேறு செய்திகள் சென்றடைந்திருக்கின்றன. இதில் சுரேஷ் அவர்களின் பேச்சு வலிமை மிக்கதாகக் காணப்பட்டது. எழுக தமிழ் பேரணியின் செய்தி இந்த நாட்டை ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க, இன நல்லிணக்கக் குழுவின் தலைவியாகவிருக்கின்ற சந்திரிக்கா, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரின் காதுகளுக்குக் கேட்கவேண்டிய செய்தி ஆகும் என்று குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளை எதிர்த்துச் செயற்பட்டவர்களே இவர்கள். இவருக்கு மண்டையன் குழுவின் தலைவர் என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. தேசியத்தலைவரின் பெயரைப் பயன்படுத்தி அரசியலில் இலாபம் தேடுவோர் இதனை நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும். தமிழ் மக்களின் மனதைக் கவர்ந்து கொள்ளும்விதமாக அமைந்திருந்த இவரின் ஆவேசமான பேச்சு தமிழ் மக்களின் தேசியத்தலைவர் பிரபாகரன் என்பதையே வெளியுலகிற்கும், உள்நாட்டிற்கும் இந்த எழுக தமிழ் பறைசாற்றியுள்ளது என்பது ஒரு வரலாற்று சிறப்பம்சமாகும்.
இதைவிடவும் தமிழ் மக்கள் பேரவையானது எழுக தமிழ் என்ற பேரணியின் மூலம் யாழ் மண்ணில் ஒரு வரலாறு பதித்திருக்கின்றது. குறிப்பாக இந்த எழுக தமிழ் பேரணியானது அதிகாரப்போட்டியின் ஊடாகவே நடந்தேறியிருக்கின்றது எனலாம். பிரபாகரன் என்று கூறும் தகுதி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கே உரித்தானது. தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளை மறந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டபோது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விலகி அன்றிலிருந்து இன்றுவரை அந்தக்கோட்பாடுகளுடன் பயணிக்கிறது. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்தான் கஜேந்திரகுமார். இந்த எழுக தமிழானது கட்சி பேதங்களை மறந்து தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து நடத்தப்பட்டது என்று கூறினா லும் கூட கட்சி பேதங்கள் பார்க்கப்பட்டது. இதில் முக்கியத்துவம் வகிக்கவேண்டிய தமிழரசுக்கட்சி இந்தப் பேரணி எவ்வாறு நடக்கப்போகிறது என்பதை வேடிக்கை பார்த்தது. எது எவ்வாறிருப்பினும் எழுக தமிழ் பேரணி சவால்களைக்கடந்து தமிழ் மக்கள் மத்தியில் பலத்த ஆதரவி னைப்பெற்று வரலாறு படைத்திருக்கிறது எனலாம்.