எவரும் எட்ட முடியாத இடம், அப்படி என்ன ஸ்பெஷல் இவரிடம்?

174

36-vayadhinile

கோலிவுட்டில் கால் பதிக்கும் ஹீரோயின்கள் எல்லோருமே ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் ஜொலிப்பார்கள். பிறகு அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

ஆனால், ஒரு சிலர் மட்டுமே காலத்தை கடந்தும் நம் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்வார்கள். அப்படி வாலி மூலம் அறிமுகமாகி குஷியில் தன் துறுதுறு நடிப்பால் தமிழகத்தையே கவர்ந்து இழுத்தவர் ஜோதிகா.

எந்த ஒரு நடிகையும் தனக்கு மார்க்கெட் இருக்கும் போதே நன்றாக சம்பாதித்து, பிறகு மார்க்கெட் இழந்து சீரியல் வரை சென்றுவிடுவார்கள்.

இந்த விஷயத்தில் ஜோதிகா மட்டுமே விதிவிலக்கு. நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு இனி சினிமாவிற்கு நோ என முடிவெடுத்து ஒதுங்கிய தருணம், மொழி படம் வெளிவந்து 100 நாள் ஓடி, அந்த வருடத்தின் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜோதிகா.

அதேபோல் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என டாப் வரிசை நடிகர்கள் அனைவருடனும் நடித்த ஒரே நடிகை ஜோதிகா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் பல ஹீரோயின்களுக்கு ரோல்மாடல் இவர் மட்டுமே, ”பலரும் மனசுல என்ன ஜோதிகான்னு நினைப்பா” என்று கேட்க வைத்ததே ஜோதிகாவின் வளர்ச்சி ஓர் உதாரணம்.

கிட்டத்தட்ட 8 வருடங்கள் தவம் போல் சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் தற்போது மீண்டும் ரசிகர்களுக்காக தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கத்தொடங்கிவிட்டார். இவரின் திரைப்பயணம் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க, ஜோதிகாவின் 38வது பிறந்தநாளான இன்று சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

SHARE