ஏண்டா ஜெயிச்சோம்ன்னு இருக்கு- ஆனந்த் உருக்கம்

203

ஏண்டா ஜெயிச்சோம்ன்னு இருக்கு- ஆனந்த் உருக்கம் - Cineulagam

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதை தொடர்ந்து வெளிவந்த செய்திகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனந்த் ஏற்கனவே படங்களில் பாடியவர், இந்த தொலைக்காட்சி மக்களை ஏமாற்றிவிட்டது என கூறினர். இதுக்குறித்து ஆனந்த் ‘கடந்த இரண்டு தினங்களாக நான் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். கடினமாக உழைத்துப் பெற்ற வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் இந்த வெற்றி எனக்கு அப்படியான ஒரு சந்தோஷத்தைத் தரவில்லை

இந்த தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்கும், தொலைக்காட்சிக்கும் நன்றி, நான் பல இசையமைப்பாளர்கள் வீட்டிற்கு முன் வாய்ப்பிற்காக தெருவில் நின்று இருக்கிறேன்.

அப்போது கூட நிம்மதியாக இருந்தேன், ஆனால், தற்போது மிகவும் கஷ்டமாக உள்ளது’ என உருக்கமாக கூறியுள்ளார்.

SHARE