ஏறாவூர் முஸ்லிம் ஊரில் தொழிற்சாலையை திறந்து அங்கு செல்லும் இக்கிராம தமிழ் பெண்களை மேற்பார்வையாளராக உள்ள முஸ்லிம் ஆண்கள் தமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்துகின்றார்கள்.

225

 

செங்கலடி புல்லுமலையில் தலைதூக்கும் முஸ்லிம்களின் வளச்சுரண்டலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

கிழக்கு மாகாணத்தில் 2007ஆண்டிற்கு பிறகு விடுதலைப்புலிகளிடம் மீட்கப்பட்ட பகுதியான செங்கலடி கறுத்தப்பாலம் தாண்டி பதுளை மாவட்டத்தை இணைக்கும் புல்லுமலை கிராமத்தில் காத்தான்குடி முஸ்லிம்களின் வளச்சுரண்டல் அதிகரித்துள்ளது.

யுத்தம் முடிந்த பின் கறுத்தபாலம் தாண்டிய தமிழ்கிராம மக்களுக்கு தேவையான நீர் தேவை பூர்த்தி செய்யப்படாத நிலையில் இங்குள்ள தமிழரின் வளங்களை சூறையாடவும் நோயை உருவாக்கவும் முழுமுயற்சியுடன் ஏறாவூர், காத்தான்குடி நகரசபை அத்தனை கிருமி உட்பட்ட கழிவுகள் கொடுவாமடுவில் கொட்டப்படுது.

அதே போன்று தமிழர் வாழ்வாதரத்திற்கு போராடும் போது இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க ஆடைத்தொழிற்சாலை தமிழ் கிராமத்தில் வைக்காமல் ஏறாவூர் முஸ்லிம் ஊரில் தொழிற்சாலையை திறந்து அங்கு செல்லும் இக்கிராம தமிழ் பெண்களை மேற்பார்வையாளராக உள்ள முஸ்லிம் ஆண்கள் தமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்துகின்றார்கள்.

கிழக்கு தமிழ் கிராமங்கள் புலிகளிடம் மீட்கப்பட்ட பின் தமிழ் கிராமங்களை முஸ்லிம்கள் இலகுவாக ஆக்கிரமித்து செல்லும் நிலை அதிகரித்துள்ளது.

காத்தான்குடி நகரசபை தவிசாளர் அஸ்பர் தினக்குரல் பத்திரிகை தடை செய்த இனவாதி அவரோடு சார்ந்த அமைச்சர் ஹிஸ்புல்லா இருவரும் கூட்டாக தமிழர் பகுதியான புல்லுமலையில் அதிக காணிகளை பெற்றுள்ளார்கள் .. .இவ்வளவு நாளும் காணியை வைத்து அமைதியாக இருந்த ஹிஸ்புல்லா
அவர்கள் புல்லுமலையில் 100 ஏக்கர் காணியில் குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதை முன்னிட்டு அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

SHARE