சொத்துக்கள், சுகங்கள், அங்க அவையங்கள், உயிர்களையும் இழந்து உரிமைக்கான போராட்டமே இழந்துவிட்டது எங்கள் தமிழினம். ஏழவருடங்கள் ஆகியும் நீதியோ நியாயமோ இதுவரை கிடைக்கவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு அவர் வழங்குள்ள சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது,
யுத்தம் என்பது ஒவ்வொறு தாய்மனதிலும் எரிந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையை இழந்த தாய் கணவனை இழந்த மனைவி தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் என்று பல்வேறு விதமான அவலங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இன்றும் அன்னமில்லாமல் ஆகாரம்மில்லாமல் எமது உறவுகள் தமது உறவுகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.