கிரீடம், தலைவா, தெய்வத்திருமகள் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக தன்னை நிரூபித்தவர் ஏ.எல்.விஜய். இவர் தயாரிப்பில் எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் நைட்ஷோ.
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யா, கௌதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சூர்யா ‘விஜய் என்னிடம் இரண்டு கதைகளை கூறியுள்ளார், ஆனால், அந்த இரண்டு கதைகளிலும் நடிக்க மறுத்து விட்டேன், ஏனெனில் நான் இன்னும் அந்த அளவிற்கு உச்சத்தை தொடவில்லை, அப்படி ஒரு அழுத்தமான கதை அது’ என கூறியுள்ளார்.