ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் அலி சப்ரி

99

 

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உரையாற்றவுள்ளார்.

அமர்வின் உயர்மட்டப் பிரிவு செப்டம்பர் (20.09.2022) ஆம் திகதி தொடங்கியது. எதிர்வரும் திங்கட்கிழமை (27.09.2022) நிறைவு பெறவுள்ளது.

அலி சப்ரி இன்று உரை
இந்த அமர்வுகளில் நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுவர். முன்னதாக, இலங்கையின் ஜனாதிபதி இந்த அமர்வில் உரையாற்றுவார் என்ற அடிப்படையில் முன்னுரிமை கடந்த 21ஆம் திகதி வழங்கப்பட்டது.

எனினும் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பதால், அந்த திகதி இன்று (24) நிர்ணயிக்கப்பட்டது.

SHARE