ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை குறித்த விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்

420
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதி,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரை சந்திக்க உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வதேச விவகார ஆலோசகர் ஜயந்த தனபால, விரைவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் இளவரசரை சந்திக்க உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை குறித்த விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 27ம் திகதி ஆணையாளர் அல் ஹ_செய்ன் ஆற்ற உள்ள உரையில் இலங்கை விவகாரம் குறித்தும் சுட்டிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமையவே இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எந்தக் காலப்பகதியில் ஜயந்த தனபால மனித உரிமைப் பேரவை ஆணையாளரை சந்திப்பார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் அமர்வுகளுக்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE