ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் செயற்படத் தீர்மானம்

319

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு தேசிய அரசாங்கமொன்றை அமைக்கத் தீர்மானித்திருந்தது.

எதிர்வரும் நாட்களில் தாம் தனித்து எதிர்க்கட்சியாக இயங்கவிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அறிவிக்க உள்ளதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக செயற்படுவது குறித்து 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விசேட மகஜர் ஒன்றை இரண்டு வாரங்களுக்குள் சபாநாயகரிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மாற்றுக் கருத்துக்களை நசுக்கி ஒடுக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE