கண்காணிப்பகத்தின் நீதி மற்றும் கொள்கை வகுப்பு பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில்,
இந்த சம்பவத்தை பொறுத்தவரை, சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் தந்தைகளில் ஒருவரான வைத்திய கலாநிதி மனோகரனின் சாட்சியப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக கடற்படையினரே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
பின்னர் விசேட அதிரடிப்படையினரே காரணம் என்று கூறப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் சாட்சியங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சம்பவத்தில் விசேட அதிரடிப் படையினரே ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்றுக்கொண்டிருந்த போதும் அவர்களின் துப்பாக்கிகள் சம்பவத்தின் போது பயன்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இந்த சம்பவத்தின் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவது இலங்கை அரசாங்கத்துக்கு கடினமான பணியாக இருக்கப் போவதில்லை என்று கண்காணிப்பகத்தின் நீதிப்பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.