ஐபிஎல் கிண்ணம் போய்விட்டதே: புலம்பும் கோஹ்லி

183

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பெங்களூர் அணியில்,கிறிஸ் கெய்ல் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி(54), டிவில்லியர்ஸ் (5), வாட்சன்(11) என ஆட்டமிழக்க பெங்களூர் அணி தோல்வியை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

இறுதியில் பெங்களூர் அணி 8 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது,

இதனால் கிண்ணத்தை தவறவிட்டது குறித்து பெங்களூர் அணியின் அணித்தலைவர் கோஹ்லி கூறியதாவது, நானும், டிவில்லியர்ஸும் விரைவில் ஆட்டம் இழந்ததே தோல்விக்கு பின்னடைவாக போய்விட்டது.

நாங்கள் இருந்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரி அமைந்திருக்கும், நாங்கள் சிறப்பாகவே ஆடினோம், இருப்பினும் வெற்றி பெற முடியாதது வருத்தமளிக்கிறது,

நான் இந்த போட்டியில் 973 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், அணிக்கு கிடைத்த முடிவால் இதனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை, ஐதராபாத்அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

625.374.560.350.160.300.053.800.748.160.70 (1)

SHARE