ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டுக்கு அச்சுறுத்தல் கிடையாது – பாதுகாப்புச் செயலாளர்

310
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது, அவ்வாறு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை குறித்து ஜனாதிபதியுடனும், பாதுகாப்புச் சபையிலும் கலந்துரையாடப்பட்டது.

துறைமுகம் மற்றும் விமான நிலைய பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவை எனக் கருதப்படும் இடங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு தரப்பினர் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாட்டின் தேசியப் பாதுகாப்பை முப்படையினர் முதனிலையாக கருதிச் செயற்பட்டு வருகின்றனர். தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித குறைபாடுகளுக்கும் இடமில்லை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் அச்சுறுத்தல் கிடையாது எனவும், சவால்களை எதிர்நோக்கத் தயார் எனவும் ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

def1

SHARE