ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரை கடத்திச் சென்ற, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 6 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரையும் அவரது முச்சக்கர வண்டியையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் கடத்திச் சென்றனர்.
இவர்களை பின் தொடர்ந்து சென்ற காவற்துறையினர் அக்குரஸ்ஸ, தியலபே பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பயணம் செய்த கப் வண்டியில் இருந்து சாகல ரத்நாயக்கவின் 326 சுவரொட்டிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மனோஜ் சிறிசேனவின் சுவரொட்டிகளும், இரும்பு கம்பிகளும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருகின்றனர்.