ஐ.நாவில் இந்தியா செய்தது பாரிய தவறு: சுனந்த தேசப்பிரிய மற்றும் நிமல்கா

683

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா, நடுநிலை வகித்தமை மிகப் பெரிய தவறு என ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்னான்டோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

2012லும், 2013லும் எதிராக வாக்களித்தது. ஆனால் இம்முறை விலகியிருந்தமை. பெரிய தவறு,

இலங்கையில் போர் முடிவுக்கு வந் பின்னர், தமிழர்கள் உள்பட அங்குள்ள எல்லா சமூகத்தவருக்கும் அரசியல் தீர்வு காண்பதற்கான சிறந்த வாய்ப்பை கொடுத்துள்ளதாக இந்தியா தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சுனந்த தேசப்பிரிய.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இறுதிவரை போராடும் என நிமல்கா பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியா இறுதி நேரத்தில் இவ்வாறு விலகிக் கொண்டமை, போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து வாய் திறக்காமல் இருந்தமை மிகவும் கவலை அளித்துள்ளது.

 

SHARE