ஐ.நா அறிக்கைக்குப் பின்  நடக்கப் போவது என்ன?

315

இன்னும் சரியாக ஒரு மாதத்தில்– வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி இலங்கை தொடர்பான முக்கியமானதொரு தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்படவுள்ளது.

.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள இந்த தீர்மானத்துக்கு முன்னதாகஇலங்கையில் போரின் போது நடந்த மீறல்கள் குறித்து .நா மனித உரிமைஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை வெளியிடப்படும்.

அந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாகவேஅடுத்த ஜெனிவா தீர்மான உள்ளடக்கம் அமைந்திருக்கும் என்று அமெரிக்கா கூறியிருந்தாலும்அது உள்ளக விசாரணைக்கு ஆதரவு அளிக்கும்ஒன்றாகவே இருக்கப் போகிறது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

.நா விசாரணை அறிக்கையுடன் .நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் கொழும்பு வருவார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம் எத்தகையதாக இருந்தாலும்– அதன் பரிந்துரைகள் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு சாதகமாக அமைந்திருந்தாலும்முதற்கட்டமாக நம்பகமான உள்நாட்டுவிசாரணை ஒன்றுக்கு வாய்ப்பளிப்பதாகவே இருக்கப் போகிறது.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இதனை தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

உள்நாட்டு விசாரணை நடத்த அரசாங்கம் இணங்கியுள்ள சூழலில்அதற்கு அமெரிக்கா அதரவளிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்இது தமிழர் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தமிழர் தரப்பு சர்வதேச விசாரணையையே வலியுறுத்தி வந்தது.

அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருந்தன.

இந்தக் கட்டத்தில்சர்வதேச விசாரணைக் கோரிக்கை புறக்கணிக்கப்படுமானால்அது உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும்கடுமையான அதிருப்தி அலையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இதன் பாதிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்கொள்ள நேரிடும்.

ஏனென்றால்மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்ததால் தான்இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா திரும்பியிருக்கிறது என்று கருதுகின்ற சில தரப்பினரும் தமிழர்கள் மத்தியில் இருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்திருந்தால் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டிருக்கும்அவர் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பார் என்று கருதும் பலரும் இருக்கின்றனர்.

ஆனால் சர்வதேச அரசியல் யதார்த்தம் அதற்கு அப்பாற்பட்டது என்பதே உண்மை.

மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட போதுதமிழர்களால் அவர் தண்டிக்கப்பட்டதாக ஆரவாரம் செய்தவர்கள்உள்நாட்டு விசாரணை ஒன்றை அமெரிக்கா பரிந்துரைக்கப் போகும் தருணத்தில்மகிந்தவைத்தோற்கடித்தது தவறு என்று வாதிட முனைவார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்திருக்காது போனாலும்தமிழர்கள் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்திருப்பார்கள்.

2005ஆம் ஆண்டு போன்றதொரு வாய்ப்பை அவருக்குக் கொடுத்து தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப்போட்டுதுன்பங்களை அனுபவிக்க அவர்கள் தயாராக இருந்திருக்க மாட்டார்கள்.

அதேவேளைஆட்சி மாற்றம் என்பது அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பினும்இத்தகையதொரு சூழல் முன்னரே எதிர்பார்க்கப்பட்டது தான்.

அமெரிக்க நலன்களை நிறைவேற்றும் ஒரு அரசாங்கம் உருவாகும் போது அல்லது மகிந்த ராஜபக்சவே அமெரிக்க நலன்களை நிறைவேற்றத் தயாராகும் போதுஜெனிவா சூழல் முற்றாகவே மாற்றமடையும்என்றும்தமிழர்களின் நலன் அங்கு நசிபடும் ஆபத்து இருப்பதையும் ஆய்வாளர்கள் பலரும் எதிர்வு கூறியிருந்தனர்.

அதைப் பலரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லைஅத்தகையவர்களுக்குத் தான் அமெரிக்காவின் இப்போதைய நகர்வு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடும்.

இப்போது அமெரிக்கா தனது கூட்டாளிகளையும் இணைத்துக் கொண்டுஇலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஒரு தீர்மானத்தை ஜெனிவாவில் முன்வைக்கப் போகிறது.

அது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டில் விசாரணை நடத்தப்படும் என்பதை அடிப்படையாக கொண்டதுஅதற்கு இலங்கையும் இணங்கப் போகிறது.

அதாவது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்நிலைமைகள் மாறியிருப்பதாகவும் அமெரிக்கத் தரப்பு கூறியிருக்கிறது.

ஆனாலும்நிஷா பிஸ்வாலுடனான சந்திப்பில் சர்வதேச விசாரணையே தேவை என்று வலியுறுத்தியிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

வடக்கு மாகாணசபையும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

இப்படியான நிலையில்உள்நாட்டு விசாரணை தமிழர் தரப்பை திருப்திப்படுத்தியாக வேண்டும்.

ஏனென்றால்நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் எந்தளவுக்கு  முக்கியமோஅதுபோலவே பொறுப்புக்கூறலில் நம்பகத்தன்மையும் முக்கியம்.

உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் நம்பகமானதாக அமையாது என்பது தமிழர்களின் கருத்து மட்டுமல்லகடந்த கால கசப்பான அனுபவமும் கூட.

குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் தன்மை ஒன்று இலங்கையில் இருக்கிறது.

அது தமிழர்களுக்கு நியாயம் வழங்கவோ அல்லது உள்நாட்டு விசாரணை மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவோ இடமளிக்காது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவம் தொடர்பாகஇரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகளை பொலிசார் கைது செய்த போது அதற்கு இராணுவத் தரப்பில் இருந்து கடும்எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு கூறப்பட்ட காரணம்தான் மிக முக்கியமானது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றியவர்கள் என்பதால் அவர்களை கைது செய்யக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதாவதுபோரில் வெற்றிபெற உதவியவர்கள் குற்றச்சாட்டுகள்நீதிப் பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்துஇரு பிரதான கட்சிகளினாலும் வலியுறுத்தப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅமைச்சர்கள் ராஜித சேனாரத்னசம்பிக்க ரணவக்க என்று எல்லோருமே இந்த விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

அதாவது போரில் முக்கிய பங்காற்றியவர்களை குற்றச்சாட்டுகள் குறித்த விசாரிக்க கூடாது என்று தடுக்கின்ற ஒரு கட்டமைப்பு கொழும்பில் இருக்கின்ற நிலையில்போருக்குத் தலைமை தாங்கியவர்களைவிசாரிக்க வேண்டிய நிலை ஒன்று வந்தால்என்ன நிலை ஏற்பபடும் என்பதை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல.

இந்தச் சந்தேகமும் நம்பிக்கையீனமும் தமிழர்களுக்கு இருக்கிறது.

தமிழர்கள் நம்பகம் வைக்காத எந்தவொரு பொறுப்புக்கூறும் பொறிமுறையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்பதை சர்வதேச சமூகம் அறியும்.

இந்த விடயத்தில் கொழும்பு மட்டும் முக்கியமானது அல்லதமிழர் தரப்பும் முக்கியமானது.

அதன் நம்பிக்கையும்ஆதரவும் இருந்தால் தான்உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மை சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

இதனால்சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு எவ்வாறு இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.

இலங்கை அரசாங்கம்இந்த விசாரணைகளை நடத்த முன்வந்தமைக்கு சர்வதேச ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கே தவிர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல.

அத்தகையதொரு நோக்கத்தை தற்போதைய அரசாங்கம் கொண்டிருந்தால்இந்த எட்டு மாத காலப்பகுதிக்குள் பல நகர்வுகளை மேற்கொண்டிருக்க முடியும்ஆனால் அத்தகைய எந்த நகர்வும்முன்னெடுக்கப்படவில்லை.

காலம் கடத்தும் உத்திகளே இதுவரையில் கையாளப்பட்டு வந்திருக்கின்றன.

அதேவேளைசர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்காது என்பது உறுதியாகியுள்ள நிலையில்தமிழர்களின் எல்லா வாய்ப்புகளும் அடைபட்டுப் விட்டதாக கருத முடியாது.

உள்நாட்டு விசாரணையின் நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் உறுதிப்படுத்தப் போகிறவர்களும் தமிழர்களாகவே இருக்கப் போகின்றனர்.

எனவேஉள்நாட்டு விசாரணைகளுக்கு தமிழர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

அந்தக் கட்டத்தில் இலங்கை அரசுடனும்சர்வதேச சமூகத்துடனும் பேரம் பேசக் கூடிய வாய்ப்பு ஒன்று தமிழர் தரப்புக்கு கிடைக்கக் கூடும்.

அத்தகைய வாய்ப்பை எந்தளவுக்கு காத்திரமான வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையிட்டு தமிழர் தரப்பு வேகமாக கவனத்தில் எடுத்து ஆராய வேண்டிய கட்டம் இது.

அதனை செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பது கூட்டமைப்புத் தான்.

உள்வீட்டுச் சண்டைசச்சரவுகளை ஓரம்கட்டி விட்டுஅடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்கத் தயாராக வேண்டும் கூட்டமைப்பு.

தொல்காப்பியன் –

unnamed (13) unnamed (14)

SHARE