மேலும், இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு எதிராக, ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களை பகிஷ்கரிக்க இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே சரியான தீர்வினை எட்டமுடியும் என தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்கியமையானது ஒரு துரதிஸ்டவசமான செயலாகும் என இவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இத்தகைய அமெரிக்காவின் சர்வதிகார செயற்பாடுகளுக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும்.
குறிப்பாக அமெரிக்க உற்பத்திகளை புறக்கணித்து அதன் சர்வாதிகாரத்தினை முடிவுக்கு கொண்டுவருவதன் ஊடாக எஞ்சியிருப்பதனையாவது சேமிக்க முடியும் என இவர் மேலும் தெரிவி்த்துள்ளார்