ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானமானது இலங்கையின் முயற்சிகளை பறைசாற்றுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பில் புதிய அரசாங்கம் கரிசனை காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தொடர்ச்சியாக சிறந்த பங்களிப்பினை வழங்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், உள்நாட்டு சட்டங்களில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சிவில் யுத்தத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்கள், விசாரணகைள் மற்றும் சட்டத்தரணிகளின் பங்களிப்பினை தீர்மானம் வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.