மன்னார் மடு பிரதேச செயலகத்திற்குட்ப்பட்ட மக்களை பயனடையுமாறு அழைக்கின்றார் வடக்கு மாகாணஅமைச்சர் டெனிஸ்வரன்.
மன்னார் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் மடு பிரதேச செயலகத்துகுட்ப்பட்ட மக்களதுபிரச்சினைகளை கருத்தில்கொண்டும் அதற்கான ஓர் தீர்வை எட்டும் நோக்கோடும் வடக்கு மாகாண கிராமஅபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இவ் விசேட நடமாடும் சேவைக்கானஆயத்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் 30-09-2015 புதன் காலை மடு பிரதேசத்துக்கு நேரில் விஜயம்மேற்கொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு முதலமைச்சர்அவர்களின் இணைப்பு செயலாளர் திரு.எஸ்.சண்முகப்பிரியன் அவர்களும் மடு பிரதேச செயலாளர்திரு.எப்.சி.சத்தியசோதி அவர்களுடனும் மடு திருத்தல பரிபாலகர் அருட் தந்தை எமிலியானுஸ்பிள்ளை அவர்களோடும் மற்றும் அங்குள்ள கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள்ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இந்த நடமாடும் சேவை தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியநிலையில் காணப்படும் மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்களது காணிகள் தொடர்பான பிரச்சினைகள்,விவசாயம் சார்ந்த பிரச்சினைகள், சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள், கல்வி சார்ந்த பிரச்சினைகள் நீர்ப்பாசனம் சார்ந்தபிரச்சினைகள், போக்குவரத்து சார்ந்த பிரச்சினைகள், வீதிகள் சார்ந்த பிரச்சினைகள் இவ்வாறாக பலதரப்பட்டபிரச்சினைகள் இங்கு காணப்படுவதால் எனது மக்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் இலகுவில் தமதுபிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு இவ் நடமாடும் சேவையை நடாத்த திட்டமிட்டுள்ளோம்.இவ் விசேட நடமாடும் சேவைக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஏனைய துறைசார் மூன்று அமைச்சர்கள்அவர்களுக்கு கீழ் இயங்கும் திணைக்களங்கள் மற்றும் மத்திய அரசின் திணைக்களங்கள் என்பனவருகைதரவிருப்பதால் இந்த அரிய சந்தர்ப்பத்தை எனது மடு பிரதேச மக்கள் தவறாது பயன்படுத்தி உடனடி தீர்வுபெறக்கூடிய விடயங்களில் உடனடித் தீர்வையும், தொடர் நடவடிக்கைகள் செய்யவேண்டிய விடயங்களில் தொடர்நடவடிக்கை மூலமும் தமக்கான சரியான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் எதிர்வரும் 30-10-2015 மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தட்சனா மருதமடு அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இவ் விசேட நடமாடும் சேவையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.