ஒரு உயிரை காக்க உதவுங்கள் பரோபகாரிகளே!

171

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயதுடைய பிரேம்குமார் டனுஜன் எனும் சிறுவன் தலையில் நரம்பியல் நோயினால் பீடிக்கப்பட்டு பொரளை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

இச்சிறுவனுக்கு அவசரமாக தலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூபா 1,500,000 (பதினைந்து இலட்சம்) தேவைப்படுவதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஏழ்மைப்பட்ட இச்சிறுவனது குடும்பத்தார் பரோபகாரிகளிடமிருந்து சத்திர சிகிச்சைக்கான பணத்தினை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க உதவுமாறு எதிர்பார்த்துள்ளார்கள்.

இச்சிறுவனது நோய், குடும்ப விபரம் பற்றிய தகவல்களை சிறுவன் சிகிச்சை பெறும் வைத்தியர் மற்றும் சிறுவனது பாடசாலை அதிபர், கிராம சேவையாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோர் உறுதிப்படுத்திய ஆவணங்களின் நிழற்படப்பிரதிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்கு இல:- 048200410026955 (மக்கள் வங்கி கிளிநொச்சி)

தொலைபேசி இல

0094774379617

0094766770518

மேலதிக விபரங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது தொலைபேசி இல:- 94213207584 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறமுடியும்.

SHARE