ஒரே சம­யத்தில் நான்கு குழந்­தை­களை கருத்­த­ரித்த மனைவி குழந்­தை­களை பிர­ச­வித்து ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட கணவர் கண்ணீர் மல்க 4 குழந்­தை­க­ளையும் கையேற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்­பவம் அமெ­ரிக்க அரி­ஸோனா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

385

 

 

ஒரே சம­யத்தில் நான்கு குழந்­தை­களை கருத்­த­ரித்த மனைவி குழந்­தை­களை பிர­ச­வித்து ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட கணவர் கண்ணீர் மல்க 4 குழந்­தை­க­ளையும் கையேற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்­பவம் அமெ­ரிக்க அரி­ஸோனா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

பீனிக்ஸ் நகரைச் சேர்ந்த கார்லஸ் மொராலஸ் என்ற மேற்­படி நபரின் மனை­வி­யான எறிக்கா (36 வயது) செயற்கைக் கருத்­த­ரித்தல் மூலம் ஒரே சம­யத்தில் 4 குழந்­தை­களை கருத்­த­ரித்தார்.

இந்­நி­லையில் அவர் பிர­ச­வத்­திற்­காக பனர் குட் சமா­ரியன் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.
இத­னை­ய­டுத்து 3 பெண் குழந்­தை­க­ளையும் ஒரு ஆண் குழந்­தை­யையும் ஒரே சம­யத்தில் பிர­ச­வித்த எறிக்கா, பிர­ச­வத்தின் போதான அதி­க­ளவு குருதி இழப்பு கார­ண­மாக உயி­ருக்­காக போரா­டிய நிலையில் அவ­சர சிகிச்­சைப்­பி­ரிவில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவர் அங்கு அனு­ம­திக்­கப்­பட்டு ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலையில் உயி­ரி­ழந்­துள்ளார்.

ஒரே சம­யத்தில் 4 குழந்­தை­களை பிர­ச­விக்­கப் ­போ­வ­தை­யிட்டு பெரும் எதிர்­பார்ப்­புடன் இருந்த எறிக்கா கடைசி வரை தனது குழந்­தைகள் எவ­ரையும் கையில் ஏந்தும் பாக்­கி­யத்தை பெற­மு­டி­யாது உயி­ரி­ழந்­தமை தனக்கு மிகுந்த கவ­லையை அளிப்­ப­தாக மொராலஸ் கூறினார்.

இந்­நி­லையில் அவர் தனது குழந்­தை­களில் ஒரு­வ­ருக்கு தனது மனை­வியின் ஞாப­கார்த்­த­மாக எறிக்கா என பெயர் சூட்­டி­யுள்ளார்.

ஏனைய குழந்­தை­க­ளுக்கு கார்லொஸ், பெயஸ்லி, திரேசி என பெயர்கள் சூட்­டப்­பட்­டுள்­ளன. தற்­போது 4 குழந்­தை­க­ளையும் தனித்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ள மொராலஸ், குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான வகுப்பிற்கு சென்று வருகின்றார்.

Baby USA

SHARE