தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்தில் இரு முன்னணி நடிகர்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுவது உண்டு. அந்த வகையில் இன்றைய சினிமாவில் சண்டைக்காரர்களாக சிம்பு-தனுஷ் சமீபத்தில் நட்பாக பழகி வருவது அனைவரும் அறிந்த விடயம்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து துருக்கி நாட்டுக்கு செல்லவிருக்கின்றனர். அதற்கு காரணம் கௌதம் மேனன் தான்.
இவர் தற்போது தனுஷை வைத்து இயக்கி வரும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா, அதே வேளையில் சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா படத்தை கிட்டத்தட்ட முடிக்கவுள்ள நிலையில் ஒரு பாடல் மட்டுமே மீதமுள்ளது.
அதை துருக்கியில் படமாக்க திட்டமிட்டுள்ளார். அதேநேரம் தனுஷ் படத்தின் முக்கிய காட்சியும் அங்கு எடுக்கப்படவுள்ளதால் இருவரையும் ஒரே நேரத்தில் துருக்கிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.