காதலர் தினத்தினை முன்னிட்டு ஹாங்காங் நகரில் ஒளிரும் வெள்ளை ரோஜா பூந்தோட்டத்தை உருவாக்கி காதல் ஜோடிகளுக்கு சமர்ப்பித்துள்ளனர்.காதலர் தினத்தினை முன்னிட்டு ஹாங்காங் நகரில் 25,000 ஒளிரும் வெள்ளை ரோஜா பூந்தோட்டத்தினை வடிவமைத்துள்ளனர்.
வரும் 22 ஆம் திகதிவரை காட்சிப்படுத்தவுள்ள இந்த ஒளிரும் சிறப்பு பூந்தோட்டத்தை பார்வையிடவும் அதன் அருகே புகைப்படம் எடுக்கவும் உலகெங்கிலும் இருந்து காதலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். LED விளக்குகளால் வடிவமைத்துள்ள இந்த பூந்தோட்டத்தை வடுவமைக்க 6 மாதங்கள் ஆனதாக இதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைத்துள்ள இந்த பூக்கள் தனித்தனியாக சிரத்தை எடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த ஒளிரும் சிறப்பு பூக்களை வாங்கிச் செல்ல விருப்பப்படுபவர்களுக்கு 9 பவுண்டு விலையில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மூன்று சதுர மீற்றரிலும் 25-க்கும் அதிகமான ஒளிரும் ரோஜாவை நிறுவியுள்ளனர். காலைப்பொழுதிலும் இந்த தோட்டம் அழகு சேர்ப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். செல்பி பிரியர்களுக்கென பிரித்தியேகமாக ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளனர், அதில் சிறப்பான கோணத்தில் புகைப்படங்கள் எடுக்கலாம் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். |