கொட்டகலை யூலிப்பீல்ட் பகுதியில்நேற்று பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் ஒன்றான இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் அமரர். வேலாயுதம் இங்கு நம்முடன் இங்கு இல்லை.
இருந்தும் எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்துடன் சம்பள பிரச்சினையை பேசி ஒரு இனக்கப்பாட்டுக்கு வரும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி செயற்படும்.
அதேவேளை தீபாவளி முற்பணமாக ரூபா 15000த்தை சம்பள பேச்சுவார்த்தையின் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தை காலப்பகுதிகான மீதி கொடுப்பணவில் இருந்து வழங்குவதற்கும் தீபாவளியின் பின் இதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்நின்று செயற்படும்.
மலையகத்தில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமே தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு இலவசமாக கொடுக்கப்படுகின்றது.
ஏனைய தொழிலாளர்களின் லயன் குடியிருப்பை முற்றாக ஒழித்துகட்ட கடன் அடிப்படையிலான வீடுகள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேவேளை இவ்வீடுகளை அமைப்பதற்கு காணி உரிமையை பெற்றுக்கொடுத்த அமரர். வேலாயுதம் அவர்களுக்கு இந்த வேலையில் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மலையக மக்களின் மீது தார்மீக பொறுப்புக்கொண்டு செயல்படுகின்ற இந்தவேலையில் மலையக மக்களுக்கான அபவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் எமக்கு எந்த தாமதமும் ஏற்படாது.
இந்த நாட்டில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் செய்ய முடியாத வேலைத்திட்டங்களை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த புதிய அரசாங்கம் செய்து முடிக்கும். 5 வருட காலப்பகுதியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக இந்த புதிய அரசு முனைப்புடன் செயல்படுகின்றது.
எனவே எதிர்காலத்தில் தொழிலாளர்கள் ஏனைய சமூகத்தினருடன் மேலொங்கி வாழும் வாழ்க்கை வெகுதொலைவில் இல்லை என இவர் மேலும் தெரிவித்தார்.
பசும் பொன் வீடமைப்பு திட்ட வீடுகள் கையளிப்பு
இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட கொட்டகலை யூலிப்பீல்ட் பகுதியில் 17 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு நேற்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் பசுமை பூமி எனும் காணி உறுதிப்பத்திரத்துடன் மக்களுக்கு கையளித்தார்.
பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நான்காவது கட்டமாக கொட்டகலை யூலிப்பீல்ட் வெலிங்டன் பிரிவில் 17 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு வெள்ளையன் புரம் என பெயர் சூட்டி காணி உறுதிப்பத்திரத்துடன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்நேற்று கையளித்தார்.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.