ஓவியாயை ரசிகர்களுக்கு பிடிக்க காரணம் இதுதானா?

143

டாப் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் முன்னணி இடத்தில் இருக்கிறது BiggBoss. 15 பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரணி தாண்டி மிகவும் பிடித்த பிரபலம் ஓவியா. இவரும் பல முறை நிகழ்ச்சி வெளியேற்றத்திற்கு தேர்வானாலும் மக்களால் இவர் மிகவும் ஆதரிக்கப்படுகிறார்.

அப்படி ஓவியாவை ரசிகர்களுக்கு பிடிக்க காரணம் என்னவாக இருக்கும். இதோ சில விஷயங்கள், யாரையும் அவ்வளவு சீக்கிரம் எதிர்க்க மாட்டார், தனக்கு என்ன தோணுதோ சொல்வது, அதை மற்றவர்கள் கேட்டவில்லை என்றால் விட்டுவிடுவது.

வேண்டுமென்றே யாரிடம் போய் வம்பு இழுப்பது இல்லை.

யாரையாவது மற்றவர்கள் சேர்ந்து ஒதுக்கினால் தானும் அவரை ஒதுக்காமல் அவரிடம் போய் பேசுவது, சமாதானம் செய்வது.

இதுவரை ஒருவரை கூட தவறாக மற்றவர்களிடம் பேசியதில்லை. அப்படி தனக்கு ஒரு கருத்து தோன்றினால் அப்படியே வெளிப்படையாக பேசுவது என்று இருக்கிறார்.

ஒவ்வொரு நொடியையும் தனக்கு பிடித்தது போல் நடிக்காமல் வாழ்கிறார். இதுபோன்ற விஷயங்கள் ரசிகர்களுக்கு ஓவியாவிடம் பிடித்தவையாகும்.

SHARE