கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுக்க வேண்டும். டாக்டர் வசந்த பண்­டார

175

கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுக்க வேண்டும். அதை­வி­டுத்து வேறு வழி­யில்லை எனத் தெரி­வித்­துள்ள தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, தமிழ்­நாட்டு மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை மூடி­ம­றைக்­கவே கச்­ச­தீவை மீட்போம் என்ற விட­யத்தை ஜெய­ல­லிதா முன்­வைக்­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் கூறு­கையில், 1976 ஆம் ஆண்டு இந்­திய பிர­த­ம­ரான இந்­தி­ரா­காந்­தியால் சட்­ட­ரீ­தி­யாக உடன்­ப­டிக்கை மூலம் அன்­றைய இலங்­கையின் பிர­த­ம­ரான ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­க­விடம் கச்­ச­தீவு கைய­ளிக்­கப்­பட்­டது. அன்­றுடன் கச்­ச­தீவு தொடர்­பான இந்­தி­யாவின் உரிமம் இல்­லாமல் போய்­விட்­டது. கச்­ச­தீவு இன்று இலங்­கைக்கு சொந்­த­மா­னது. இரு நாடு­க­ளுக்­கி­டையே செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கைக்கு அமைய சட்­ட­ரீ­தி­யாக இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டது. இது சர்­வ­தேச உடன்­ப­டிக்கை. இதனை மீறி கச்­ச­தீவை மீண்டும் இந்­தி­யாவால் பெற முடி­யாது. அவ்­வாறு பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுத்து பல­வந்­த­மா­கவே கச்­ச­தீவை இந்­தியா பெற வேண்டும். அதை­வி­டுத்து வேறு வழி­யில்லை. இவ்­வா­றான செயற்­பாட்டை இந்­திய மத்­திய அரசு முன்­னெ­டுக்­காது.

எனவே ஜெய­ல­லிதா கச்சதீவை மீட்போம் என கூச்சலிடுவது, தமிழ்நாட்டு மக்களின் பிரச்சி னையை திசை திருப்பும் நோக்கானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.k.tevu

SHARE