கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவத்த நாச்சிஆர பகுதியில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டதில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்லந்த பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சட்டவிரோதமான முறையில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், 41 வயதுடைய கொலொன்ன பகுதியை சேர்ந்த விஜேய்பால எனப்படுபவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அத்துடன், சந்தேக நபரை பண்டாரவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைபொலிசார் மேற்கொண்டுள்ளதோடு, கஞ்சா தோட்டத்தை அழிக்கும்நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.