கஞ்சா புகைத்த குற்றச்சாட்டின் பேரில் 4 சந்தேகநபர்கள் கைது

135

திருகோணமலையில் கஞ்சா புகைத்த குற்றச்சாட்டின் பேரில் 4 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

ஆண்டாங்குளத்திற்கு அருகில் கஞ்சா புகைப்பது தொடர்பாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே நேற்றிரவு 20 – 25 வயதுகளுக்கும் இடைப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், திருகோணமலை, அலஸ் தோட்டம் பகுதியில் கடை ஒன்றினை உடைத்து பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

29 வயதுடைய கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

SHARE