மன்னார் மாவட்ட காணாமல்போனோர் சங்கத்தின் தலைவி இமானுவேல் உதயசந்திராவின் நான்கு பிள்ளைகளில் ஒரு மகன், இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல்போய் 8 வருடங்கள் ஆகியுள்ளன.
எனது மகனின் கடத்தல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட 50ம் மேற்பட்ட முறைபாடுகள் பல தரப்பினரிடமும் முறையிட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக இதுவரை எந்த முடிவும் தெரியவில்லையனெ தெரிவித்துள்ளார்.
அவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு நான்கு பிள்ளைகள் இதில் இரண்டாவது மகளை நான் இழந்துள்ளோன்.
எனது மகன் வீட்டில் உறங்கிகொண்டிருந்த வேளையில் இலங்கை கடற்படையினர் கடத்தி சென்றுள்ளனர். அவர் பிடித்து செல்லும்போது அவருக்கு 24வயது தற்பொழுது அவருக்கு 31 வயதாகிறது.
எனது மகன் காணாமல்போய் 8 வருடங்கள் ஆகிறது. இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட சுமார் 50ம் மேற்பட்ட பலதரப்பட் இடங்களில் முறைப்பாடு செய்திருக்கிறேன் ஆனால் இதுவரையில் எனது மகனுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
குறிப்பாக மன்னாரில் ஜனாதிபதி ஆணைக்குழு இரு தடவைகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
எனவே எனது மகனின் நிலை தொடர்பாக அவர்களிடம் முறையிட்டேன். எனது பிள்ளையை காட்டவேண்டும் என கோரியிருந்தேன். ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையை பார்த்தால் எனது பிள்ளையை கண்டுபிடித்து தருவதோ அல்லது அவருக்கு என்ன நடந்துள்ளது என்பதை எமக்கு தெரிவிப்பது தொடர்பாக அக்கறைகாட்டாது.
மாறாக உங்களுக்கு விட்டுத்திட்டம் உள்ளதா?, சமூர்த்தி உதவிகள் இருக்கிறதா? ஆடு.மாடு,கோழி இருக்குதா? என்று கேட்கிறார்களே தவிர காணாமல் போண எனது மகன் தொடர்பாக அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.
இதனால் எங்களுக்கு உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையே எங்களுக்கு வேண்டும்.
நான் மன்னார் மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தின் தலைவியாக இருப்பதால் அரச புலனாய்வு பிரிவினரால் அதிக அச்சுறுத்தல் எனக்கு உள்ளது.
அரச புலனாய்வு பிரிவினர் எனது வீட்டுக்கு வந்து விசாரணை செய்கிறார்கள். மேலும் நான் அன்றாடம் எங்கு செல்கிறேன் போன்ற விபரங்களை அவர்களிடம் சொல்லவேண்டும்.
சிலவேளைகளில் தொலைபேசியுடாக அழைப்பினை ஏற்படுததி எங்கே நிற்கின்றாய் என கேட்பார்கள் இது எனக்கு விடப்படும் அச்சுறுத்தல் ஆகும்.
எனது பிள்ளை இருக்கிறானோ, இல்லையோ என்று தெரியாத நிலையில் நாங்கள் படுகின்ற வேதனை மிக அதிகம்.
எனவே எங்களுக்கு உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கையில்லை சர்வதேச விசாரணையே எங்களுக்கு வேண்டும் என கண்ணீர் மல்ல தெரிவித்தார்.