திருகோணமலை கடற்படை முகாமின் ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த கடற்படை சிப்பாய் ஒருவர் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கடற்படை சிப்பாய் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு தரப்பினரின் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக திருகோணமலை துறைமுகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்கொல்ல, பள்ளியகொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 36 வயதான கடற்படை சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.