கடற்பரப்பில் தத்தளித்த மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காப்பற்றியுள்ளனர்.

273

image_handle

இலங்கையின் வடக்கில் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் தத்தளித்த மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த இந்த மீனவர்கள் வந்த படகில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த இந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து, படகு பழுதுப்பார்க்கப்பட்ட பின்னர், மீனவர்கள் படகுடன் சர்வதேச எல்லையில் வைத்து இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE