
கமல்ஹாசன்
சென்னையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் சாலையின் இருபுறமும், சாலைத் தடுப்புகளிலும் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய கட்சியினரைக் கடுமையாக எச்சரித்துள்ளனர். இனிமேல் கட்சி தொடர்பான பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் எனத் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல போனேன். அப்போது அந்த ரசிகரின் அம்மா தனது மகன் பற்றி கூறியது கலங்க வைத்தது. என் மீது அந்த ரசிகருக்கு எவ்வளவு பிரியம் என்பதை விளக்கினார்கள். அந்த வீட்டில் இருந்து வெளியில் வந்த உடனேயே ரசிகர்ளிடம் இனி கட் அவுட் வைப்பதோ பால் அபிஷேகம் செய்வதோ கூடாது என்று கடும் உத்தரவை பிறப்பித்தேன்’. இவ்வாறு அவர் கூறினார்.