கடும் மழையினால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

175

மலையகத்தில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருவதால் பெருந்தோட்டத் தொழிலாளர்களும், பொதுமக்களும் அசௌகரியஙளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. அந்த வகையில் 22.08.2016 திங்கட்கிழமை அதாவது இன்றைய தினம் காலை முதல் பெய்துவரும் கடும் மழையினால் அட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் மற்றும் சிற்றுன்டிச்சாலைகளிலும் நீர் நிரம்பியுள்ளதால் பொலிஸாரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed (6) unnamed (7)

SHARE