புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செம்பட்டை 18 மைல் கல் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலம் செம்பட்டை பகுதியில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் காணப்பட்ட நிலையில், நேற்று இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் 45 வயதான 5 பிள்ளைகளின் தாய் ஒருவர் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த பெண் நேற்று மாலை அருகில் உள்ள சில்லறை கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
தாய் நீண்டநேரம் வீட்டுக்கு வராத காரணத்தினால், இளைய மகள் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய தேடுதல் நடத்திய பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.