மீசாலையில் கடை கட்டிடத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மீசாலை – இராமாவில் பகுதியில் நேற்று(13) இரவு 10:45 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மின் ஒழுக்கினால் விபத்து
இந்நிலையில், கடையில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று இரவு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.