நிலம் கீழ் இறக்கத்தால் 25 குடும்பங்களை சேர்ந்த 83 பேர் இடம் பெயர்வு…!
கண்டி மாவட்டம் தெல்தோட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெல்தோட்ட குரூப் தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் கீழ் இறங்கிவுள்ளதால் 25 குடும்பங்களை சேர்ந்த 110 பேர் இடம் பெயர்ந்து கலஹா தெல்தொட்ட குரூப் திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லயன் இலக்கம் 01, லயன் இலக்கம் 02, வீட்டு குடியிருப்பு தொகுதிகளை சேர்ந்தவர்களை இவ்வாறு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட நடவடிக்கையாக பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் உலர் உணவு பொருட்கள் உட்பட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளபட்டுள்ளது.
பாதிப்புக்கு உள்ளான மக்களில் 10 பாடசாலை மாணவர்களும் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் 05 பேரும் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் 02 பேரும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 03 பேரும் அடங்குகின்றனர்.
தற்போது இவர்களுக்கு மலகச கூட வசதி, மருத்துவ வகதி குறைபாடாக காணப்படுகின்றது.
பாதிப்புக்குள்ளான மக்கள் கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு தேவையான ஆரம்பகட்ட வசதிகள் யாவும் பூர்த்தியாகி உள்ளது அடுத்த கட்டமாக எங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கும் தொடர்ந்து நிரந்தர வீடுகளுக்கும் செல்ல சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.