கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட பெண்! 3 பேர் பலியான பரிதாபம்

92

அமெரிக்காவில் பெண்ணொருவர் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, பின் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள ஹார்பேர் கவுண்டி பகுதியில் மருந்து பொருட்கள் உற்பத்தி மையம் ஒன்று உள்ளது.

இந்த மையத்தில் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர், சரமாரியாக அங்கிருந்தவர்களை சுட்டுள்ளார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

பின்னர் குறித்த பெண்ணை தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், விரைந்து வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் தாக்குதல் நடத்திய பெண்ணின் பெயர் ஸ்னோசியா ம்மோஸேலே என்பதும், அவர் ரிட் ஏய்ட் வணிக நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

எனினும் அவர் ஏன் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தினார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE