டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், இந்த மாத தொடக்கத்தில்ஏற்படுத்திய விபத்தில் முதியவர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
வீனஸின் கார் விதிமீறி இயக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இதுகுறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வீனஸ், எப்படி அந்த சம்பவம் நடந்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை, பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை என கூறிக் கொண்டிருந்தவர் சில நிமிடங்களில் அழுகத் தொடங்கினார்.