கதிர்காமரைக் கொலை செய்ய அரசாங்கம் புலிகளுக்கு பணம் வழங்கியதா?

257

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு அப்போதைய அரசாங்கத் தரப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதா என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு பணம் வழங்கியமைக்கும் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைக்கும் இடையில் தொடர்புகள் இல்லை என எவராலும் மறுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார், நான்கு மாதங்களின் பின்னர் வடக்கு மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் புலிகளுக்கு பணம் வழங்கியிருந்தது.
கதிர்காமர் கொலைக்கும் பணம் வழங்கப்பட்டமைக்கும் இடையில் தொடர்பு இருக்கக் கூடிய வலுவான சாத்தியங்கள் காணப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE