கபாலி டிக்கெட் கிடைக்காத சோகம்!… தற்கொலை செய்துகொண்ட ரஜினி ரசிகர்…

345

உலகம் முழுவதும் நேற்று கபாலியின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு வருகிறது. அதிக எதிர்பார்ப்புள்ள இந்த படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுப்பதற்காக தயாரிப்பு தரப்பில் பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

கபாலியை முதல் நாள் பார்க்கவேண்டும் என்ற மோகம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.ஆனால் மலேசியவை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று, டிக்கெட் கிடைக்காத சோகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக, அது திரையிடப்பட உள்ள மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார். ஆனால், டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த அவர், மாலின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…

 

SHARE