கரடிகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் ரோபோ ஓநாய்கள்

404

ஜப்பானில்  தகிகாவா பகுதியில் (Takikawa)  கரடிகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காக ரோபோ ஓநாய்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

இவ் ரோபோ ஓநாய் உண்மையான ஓநாயை போல முடியையும், ஒளிரும் சிவப்பு கண்களையும் கொண்டுள்ளது.கரடிகள் பயிர்களை சேதப்படுத்த வரும் போது  இந்த ரோபோ ஓநாய்கள் சத்தமாக ஊளையிடுகின்றன.

இதனால் சேதப்படுத்த வரும் கரடிகள் உடனடியாக அந்த இடத்தைவிட்டு செல்வதாக அந்நாட்டு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE