கொழும்பு ஹட்டன் பிரதான பாதையின் கரவனல சந்தியில் கேகாலைக்கு திரும்புவதற்கான பாதையில் போடப்பட்டிருக்கும் பெயர் பலகையில் கேகாலை என்பதற்கு பதிலாக கெகாணல என தமிழை கொலை செய்துள்ளார்கள். இச் செயற்பாடு பாதை ஊடாக பயணிக்கும் தமிழ் மொழி பேசுபவர்களை பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன் இதை திருத்துவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்காமை குறித்து கவலைக்குள்ளாகியுள்ளது. தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பாக செயற்பட்டு வரும் அரச நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
தகவலும் படங்களும் :- பா.திருஞானம்