கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா

443

 

கருணாவின் துரோகம்  விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார்.
39937843_leader1 download-64-1 Fotor0101620111-500x273-2  prabhkaran_col_karuna_ltte_spl
கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளை அடுத்து கருணா குழுவின் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஓரளவாவது கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கிறது. கருணா குழு தற்பொழுது வெளிப்படையாக தென்தமிழீழத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் முகாம்களை திறந்து வருகின்றது. சிறுவர்களையும் இளைஞர்களையும் பலவந்தமாக படையில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. கொலைகளையும் செய்து வருகின்றது. ஆனால் சிறிலங்காவின் அமைச்சர்களும், இராணுவத் தளபதிகளும் கருணா குழுவிற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லையென்றும், கருணா குழு சுதந்திரமாக இயங்குகிறது என்றும் கூறி வருகின்றார்கள்.

அண்மைக் காலங்களில் கருணா குறித்த மாயைகள் சிறிலங்கா அரசாலும் தமிழினத் துரோகிகளாலும் சிறிது அதிகமாகவே பரப்பப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானது கருணாவின் இராணுவ ஆற்றல் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. கருணாவே முன்பு விடுதலைப்புலிகளின் வெற்றிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்ததாகவும், கருணா இல்லாத காரணத்தால் விடுதலைப்புலிகளால் இனி போர் புரிய முடியாது என்றும் இந்த மாயை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை துரோகக்குழுக்களுக்கு துணை போகின்றவர்கள் நம்பவும் வேறு செய்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களில் ஒரு சிலரிடம் கூட கருணா குறித்த அச்சம் இருக்கிறது. ஆனால் கருணாதான் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு காரணம் என்று நம்புபவர்கள் இராணுவரீதியான அறிவோ, ஆய்வு செய்யும் திறனோ இம்மியளவும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு போர் நடக்கின்ற பொழுது, இயல்பாகவே தளபதிகள் மீது மக்களின் கவனம் திரும்பும். அந்த தளபதிகளைப் பற்றிய பல வீரசாகசக் கதைகள் உலாவும். இது உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஒரு சாதரண நிகழ்வு. தமிழர் வரலாற்றிலும் தளபதிகளுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. சங்க கால பாடல்களில் கூட பல தளபதிகள் போற்றிப் புகழப்பட்டிருக்கின்றார்கள். இதே போன்று ஈழப் போரிலும் பல தளபதிகள் தங்களின் வீரமும் அறிவும் மிகுந்த செயற்பாடுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார்கள்.

இந்திய ஈழப் போரை தவிர்த்து, ஈழப் போர் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஈழப் போர் 1 இல் மக்களால் அதிகம் சிலாகிக்கப்பட்டவர் தளபதி கிட்டு. அதே போன்று ஈழப் போர் 2இல் நடந்த பல சமர்களிற்கு தளபதியாக இருந்தவர் கேணல் பால்ராஜ். தளபதி கிட்டுவின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் எப்படி யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோ, அதே போன்று தளபதி பால்ராஜின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் வன்னி மண்ணை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.

பல போரியல் சாதனைகளைப் படைத்த ஈழப் போர் 1இலும் சரி, ஈழப்போர் 2இலும் சரி, கருணா என்னும் பெயர் பெரிதாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. இடையில் தென்தமிழீழத்தில் நடந்த இந்திய இராணுவத்தின் துணைப்படைகளான தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிரான சண்டைகளும், அப்போதைய தளபதியாக இருந்த கரிகாலன் தலைமையில் நடந்ததாகவே அறியப்படுகின்றது. அன்றைய ஊடகங்களிலும் கருணாவின் பெயரைக் காண முடியவில்லை. ஈழப் போர் 3இன் ஆரம்பங்களில் நடந்த சமர்களில் கருணாவின் பங்கு மிகச் சிறுதளவிலேயே இருந்தது. ஆனால் ஈழப் போர் 3இல் நடந்த சமர்களில் மிக நீண்ட சமராகிய ஜெயசிக்குறுவின் முறியடிப்புச் சமருக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்ட பிறகே, கருணா பிரபல்யம் அடையத் தொடங்கினார். அதன் பிறகு ரணில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒருவராக கருணா இடம்பெற்றவுடன் அனைத்து தமிழர்களும் அறிந்த ஒரு மனிதனாக மாறி விட்டார். இவைகளினால் ஈழப்போர் 3 இன் தளபதி கருணாவே என்கின்ற மாயையும் உருவாகி விட்டது.

ஈழப் போர் 3 இல் கருணா கட்டளைத் தளபதியாக செயற்பட்டதாக கூறப்படும் மிக முக்கிய சமர்களாக ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 ஆகியவை கருதப்படுகின்றன. ஆனால் கருணாவும், கருணாவைச் சார்ந்தவர்களும் ஜெயசிக்குறுவைப் பற்றி மட்டுமே வாய் கிழியப் பேசுவார்கள். ஓயாத அலைகள் 2 மற்றும் 3 பற்றி வாய் திறப்பதில்லை. இந்த இரண்டு சமர்களின் வெற்றிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது கருணாவிற்கு தெரியும்.

ஆனால் இவர்கள் ஜெயசிக்குறு சமரைப் பற்றி பேசுகின்ற விடயங்களிலாவது உண்மை இருக்கின்றதா என்றால், அதிலும் இல்லை என்பதுதான் பதில். அண்மைக் காலமாக இன எதிரிகள் சிலரால் ஒரு புதிய கதை பரப்பப்பட்டு வருகிறது. தேசியத் தலைவர் ஜெயசிக்குறுவை எதிர் கொள்ளாது, சிறிலங்கா இராணுவத்தை உள் நுளைய அனுமதிக்கும் திட்டத்தில் இருந்தார் என்றும், ஆனால் கருணா பொறுப்பை தன்னிடம் விடும்படியும், தான் ஜெயசிக்குறுவை முறியடித்துக் காட்டுவேன் என்று அடம்பிடித்து கூறி அவ்வாறு செய்தும் காட்டினார் என்று கதை பரப்பி வருகிறார்கள். இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், தலைவர் அவர்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு, உள்நுளைய விட்டு பின் தாக்குகின்ற திட்டத்தை போட, கருணாவோ கிழக்கு மாகாண போராளிகளை பலி கொடுக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை போட்டதாக அல்லவா அர்த்தம் வரகின்றது. இராணுவத்தை வன்னியை விட்டு விரட்டியடித்த ஓயாத அலைகள் 3ஐ விட ஜெயசிக்குறு சண்டையில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே தன்னுடைய புகழுக்காக கிழக்கு மாகாண போராளிகளை கருணா பலி கொடுத்ததாகவே இவர்களின் இந்த புதிய கதை அர்த்தம் கற்பிக்கின்றது. ஆனால் உண்மையில் ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கு பொறுப்பாக ஆரம்பத்தில் கருணா நியமிக்கப்படவில்லை. கிட்டு பீரங்கிப் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் பானுவே பொறுப்பாக இருந்தார்.

ஜெயசிக்குறு ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து தாண்டிக்குளத்தில் இருந்த வழங்கல் முகாம் மீது “செய் அல்லது செத்துமடி 1 ” என்னும் பெயரில் ஒரு ஊடறுப்புத் தாக்குதல் நடைபெற்றது. ஜெயந்தன் படையணி முக்கிய பங்காற்றிய இந்தச் சண்டை கருணாவின் தலைமையில் நடந்தது. இந்தச் சண்டை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கான கட்டளைத் தளபதியாக கருணா நியமிக்கப்பட்டார். காடுகளில் சண்டை செய்யக் கூடிய வல்லமை படைத்த ஜெயந்தன் படையணி ஜெயசிக்குறு சண்டைகளில் முக்கிய பங்கினை வகிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நியமனம் இடம் பெற்றது.

உண்மையில் ஜெயசிக்குறுவில் ஜெயந்தன் படையணி நிகழ்த்திய சாதனைகள் மயிர் சிலிர்க்க வைப்பவை. ஜெயந்தன் படையணியோடு விடுதலைப்புலிகளின் மற்றைய படையணிகளும் இணைந்து சிறிலங்கா படைகளின் நகர்வை தடுத்துபடி இருந்தன. ஆயினும் பலத்த சேதங்களிற்கு மத்தியிலும் சிறிலங்கா படைகளால் மெதுமெதுவாக மாங்குளம் வரை நகர முடிந்தது.

விடுதலைப்புலிகள் தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. போர் நீண்டு கொண்டு போவது விடுதலைப்புலிகளுக்கும் பாதகமாக முடியலாம். ஆகவே ஜெயசிக்குறுவை உடனடியாக நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக நடத்தப்பட்டதே ஓயாத அலைகள் 2. ஜெயசிக்குறு படையினர் சென்றடைய திட்டமிட்டிருந்த கிளிநோச்சி இராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இந்த ஓயாத அலைகள் 2 ஜெயசிக்குறுவை நிறுத்தியது.

ஜெயசிக்குறுவை நிறுத்திய ஓயாத அலைகள் 2 இல் கருணாவின் பங்கு என்ன?

ஒரு படைத்தளம் மீதான தாக்குதல் என்பது நீண்ட கால தயாரிப்புக்களை கொண்ட ஒன்று. குறிப்பிட்ட படைத்தளம் நீண்ட காலமாக வேவு பார்க்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் தரவுகளின் அடைப்படையில் தாக்குதல் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு பின்பு தாக்குதல் நடைபெறும். ஆகவே ஒரு தாக்குதலின் வெற்றிக்கு அடிப்படையாக வேவுப் படையணிகளின் செயற்பாடுகளும், தாக்குதலுக்கான திட்டமிடலும் அமைகின்றன.

ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான வேவு பார்த்தலை கேணல் ஜெயத்தின் தலைமையிலான விசேட வேவுப் படையணி மேற்கொண்டிருந்தது. வேவு மூலமாக பெறப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டு தேசியத் தலைவர் ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான திட்டத்தை வரைந்தார். பொதுவாகவே ஒரு பெரும் தளத்தின் தாக்குதல் திட்டம் வரையப்படும் பொழுது அது மிகவும் இரகசியமாகவே வைக்கப்படும். அதுவும் மணலாற்றில் நடந்த இதயபூமி 2 நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இரகசியங்கள் காக்கப்படுவது என்பது மிக மிக இறுக்கமான ஒன்றாக மாறியிருந்தது. ஒரு தளத்தின் மீதான தாக்குதல் திட்டமும், தாக்குதல் நடப்பதற்கான நேரமும் தேசியத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள். அனைத்து தயார்படுத்தலும் முழுமை பெற்ற பின்னர் தளபதிகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் ஒதுக்கப்படும்.

கிளிநொச்சி தளத்தை தாக்கி அழிப்பதற்கு தேசியத் தலைவர் முடிவெடுத்த பின்பு, ஜெயசிக்குறு படைகளை தடுத்து நிறுத்தியபடி மாங்குளத்தில் சண்டை புரிந்து கொண்டிருந்த அணிகளுக்கு பொறுப்பாக இருந்த கேணல் தீபனை கிளிநொச்சி தளத்தின் மீதான முற்றுகையை இறுக்கும்படி உத்தரவிட்டார். சில மாதங்கள் கழித்து தாக்குதலுக்கான உத்தரவை பிறப்பித்தார்.

கிளிநொச்சி தளம் மீதான ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கு ஜெயசிக்குறுவை எதிர்த்து போரிட்ட பெரும்பாலான அணிகள் ஈடுபடுத்தப்பட்டன. உள் நுளைந்து தளத்தை தாக்கி அழிப்பதற்கு கேணல் தீபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். முன்பு ஒரு முறை கிளிநொச்சி தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முழுமையான வெற்றியை பெறவில்லை. அப்பொழுது ஆனையிறவுத் தளத்தில் இருந்து கிளநொச்சி இராணுவத் தளத்திற்கு உதவிகள் கிடைத்ததே அதற்கு காரணம். அதைக் கருத்தில் கொண்டு இம் முறை ஆனையிறவில் இருந்து உதவிக்கு வரும் படைகளை தடுக்கும் பொறுப்பு கேணல் பால்ராஜுக்கு வழங்கப்பட்டது. கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஆனையிறவில் இருந்து உதவிக்கு வந்த இராணுவத்தினர் மீது கடும் தாக்குதலை தொடுத்து பலத்த இழப்பை எதிரிக்கு ஏற்படுத்தி விரட்டி அடித்தன. ஆனால் உள் நுளைந்த படையணிகள் மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. ஒரு நாள் முழுவதும் போரிட்டும் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து கிளிநொச்சி தளத்தின் மீது ஆட்லறித் தாக்குதல் கடுமையாக்கப்பட்டது. கிட்டு பீரங்கிப் படையணியின் முழு வலுவும் ஒரு சேரப் பிரயோகிக்கப்பட்டது. சண்டையும் முடிவுக்கு வந்தது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள் பெரும் பாங்காற்றி இருந்தன. கிளிநொச்சி தளம் வெற்றி கொள்ளப்பட்டதன் அடையாளமாக கேணல் விதுசா புலிக் கொடியை ஏற்றினார். இந்தச் சமரில் கருணாவின் பங்கு சொல்லிக் கொள்ளும்படி இருக்கவில்லை என்பதே உண்மை.

இந்த ஓயாத அலைகள் 2 மூலமே தமிழர் தாயகத்தை கூறு போட முனைந்த ஜெயசிக்குறு நிறுத்தப்பட்டது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையின் வெற்றிக்கு விசேட வேவுப் படையணிகள் ஒரு காரணம். ஆனையிறவில் இருந்த வந்த படைகளை விரட்டியடித்த கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். உள் நுளைந்து மிகக் கடும் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுத்து கைப்பற்றிய பகுதிகளை தக்க வைத்திருந்த கேணல் தீபனின் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். சண்டையில் அளப்பரிய தியாகங்கள் புரிந்த மகளிர் படையணிகள் ஒரு காரணம். சண்டைய முடிவுக்கு கொண்டு வந்த கிட்டு பீரங்கிப் படையணி ஒரு காரணம்.

இதில் யாரவது ஒரு பகுதி சரியாக செயற்படவில்லையென்றாலும் சண்டையின் போக்கு மாறியிருக்கும். ஆகவே ஒரு சமரின் வெற்றி;க்கு யாரும் உரிமை கோர முடியாது. கரந்தடித் தாக்குதல்களாக ஆரம்பித்த ஈழ விடுதலைப் போராட்டம் பெரும்தளங்களை தாக்கி அழிக்கின்ற பெரும் சமர்களாக பரிமாண வளர்ச்சி பெற்ற பின்னர், எந்த ஒரு சமரின் வெற்றிக்கும் யாரும் உரிமை கோர முடியாது. விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு தான்தான் காரணம் என்று ஒரு தளபதி சொன்னால், அவருக்கு புத்தி பேதலித்து விட்டது என்றுதான் அர்த்தம்.

ஆனால் கருணாவும், அவரை சார்ந்தவர்களும் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு கருணாவே காரணம் என்று உளறுகிறார்கள். தென்தமிழீழத்தை சேர்ந்த போராளிகளின் வீரத்திலும் தியாகத்திலும் இவர்கள் குளிர் காய முனைகின்றார்கள்.

கருணாவின் இராணுவ வல்லமை என்பது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. காட்டுச் சண்டைகளில் நீண்ட கால தற்காப்புச் சண்டைகளை செய்யக் கூடிய அனுபவம் கொண்ட கருணா ஒரு பெரும் இராணுவத் தளத்தின் மீதான வலிந்து தாக்குதலின் யுக்திகளை சரியாக அறிந்தவர் அல்ல. கிழக்கில் வவுணதீவு போன்ற இராணுவ முகாம்கள் மீதான கருணாவின் திட்டமிடலுடன் கூடிய தாக்குதல்கள் விடுதலைப்புலிகள் தரப்பில் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தின. சரியான திட்டமிடல் இன்றி கிழக்கின் போராளிகளை பல முறை அநியாயமாக பலி கொடுத்தவர்தான் கருணா. பெரும் தளங்கள் மீதான வலிந்த சமர்களில் விடுதலைப்புலிகளின் பல தளபதிகளை விட மிகக் குறைந்த அனுபவம் கொண்டவர் கருணா. கருணாவிற்கு அடத்த இடத்தில் இருந்த கேணல் ரமேஸ் கருணாவை விரட்டியடித்த தாக்குதலை வழி நடத்தியதை நினைத்துப் பார்க்க வேண்டும். தனக்கு நன்கு பரிச்சயாமான பாதுகாப்பான ஒரு பிரதேசத்தில் போரிட முடியாமல் தப்பி ஓடியவர் கருணா. முக்கியமாக இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். விடுதலைப்புலிகளுடன் இருந்த காலத்தில் கருணாவின் தலைமையில் நடந்த சண்டைகளை கவனித்தால் ஒன்று விளங்கும். நகர்புறங்களில் படை நடத்திய அனுபவம் கருணாவிற்கு கிடையாது. அதற்கான திறனும் கருணாவிடம் இல்லை.

ஆனால் வரவிருக்கும் ஈழப் போர் 4 நகர்ப்புறங்களிலேயே நடைபெறும். வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி பெரும்பாலான காட்டுப் பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. கிழக்கைப் பொறுத்தவரை திருகோணமலை நகரமும் மட்டக்களப்பு நகரமும் விடுதலைப்புலிகளின் முக்கிய இலக்குகளாக இருக்கும். இவைகளை கருத்தில் கொண்டே நகர்ப்புற சண்டைகளில் மிகவும் அனுபவம் கொண்ட கேணல் பானு கிழக்கின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என நம்பலாம். அதாவது இனி வரப் போகும் சண்டைகளில் கருணாவின் விலகல் சிறிய அளவு கூட தாக்கத்தினைக் ஏற்படுத்தாது என துணிந்து கூறலாம்.

இனி விடுதலைப்புலிகள் மரபு வழிச் சண்டையில் உச்ச திறனை வெளிப்படுத்திய ஓயாத அலைகள் 3 பற்றி பார்ப்போம். சிறிலங்கா அரசு 18 மாதங்கள் சண்டை செய்து பிடித்த இடங்களை 3 நாட்களில் விடுவித்த அற்புதம் அது. அப்படியே தமிழர் தாயகத்தின் தொண்டையில் முள்ளாக இருந்த ஆனையிறவையும் கைப்பற்றிய பெரும் சமர் அது.

ஓயாத அலைகள் 3 நடவடிக்கையானது பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகளின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் பற்றி மட்டுமே தளபதிகளுக்கு தெரிந்திருந்தது. ஒட்டிசுட்டானில் தொடங்கிய சண்டைகள் ஆனையிறவில் தான் முடியும் என்று எந்த தளபதியும் அறிந்திருக்கவில்லை.

இவ்வளவையும் விடுங்கள். விடுதலைப்புலிகளுக்கு மரபுவழிச் சண்டைகளை கற்றுக் கொடுத்த கர்த்தாவாக தன்னைக் காட்டிக் கொள்ளும் கருணாவுக்கு ஓயாத அலைகள் 3 ஆரம்பித்த விடயமே தெரியாது.

ஓயாத அலைகள் 3 ஒட்டுசுட்டானில் ஆரம்பமாகியது. கேணல் ஜெயத்தின் தலைமையில் விடுதலைப்புலிகளின் படையணிகள் சில மணி நேர சண்டையின் பின்னர் ஒட்டுசுட்டானை கைப்பற்றின. இதே வேளை கேணல் சொர்ணத்தின் தலைமையிலான பிறிதொரு படையணிகள் நெடுங்கேணியை கைப்பற்றின.

இந்தக் களோபரங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது எதுவும் அறியாமல் கருணா மன்னார் பகுதியில் சில படையணிகளுடன் தேசியத் தலைவரின் உத்தரவிற்காக காத்துக் கொண்டிருந்தார்.

கேணல் தீபனின் தலைமையில் சென்ற புலிகளின் படையணிகள் கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன் குளம் போன்ற பகுதிகளை கைப்பற்றிய படி புளியங்குளம் நோக்கி முன்னேறின. கேணல் தீபனின் தலைமையிலான படையணிகளும், நெடுங்கேணியில் இருந்து ஒலுமடுவை கைப்பற்றிய படி முன்னேறி வந்த படையணிகளும் இணைந்து புளியங்குளத்தை கைப்பற்றின. இதற்கு முன்னர் கேணல் சொர்ணத்தின் வழிநடத்தலில் மணலாற்றில் இருந்த ஒதிய மலைப் பகுதியும் அதை அண்டிய பல பகுதிகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

ஓயாத அலைகள் மூன்றின் இரண்டாம் கட்டமாக கேணல் ஜெயத்தின் தலைமையிலான படையணிகள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

ஓயாத அலைகள் மூன்றின் மூன்றாம் கட்டமாக ஆனையிறவுப் பெருந் தளத்தின் மீதான முற்றுகைச் சமர் அமைந்தது. இந்த முற்றுகைச் சமரின் ஒரு பகுதிக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்டார். கருணாவின் தலைமையிலான படையணிகள் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு போன்ற பகுதிகளை கைப்பற்றின. ஆனையிறவுத் தளத்திற்கு வன்னியிலிருந்த வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட தளங்களாகிய பரந்தன், உமையாள்புரம் போன்ற பகுதிகளை கேணல் தீபன் தலைமையிலான படையணிகள் கைப்பற்றின.

ஓயாத அலைகள் மூன்றின் நான்காம் கட்டமாக குடாரப்பு தரையிறக்கமும், ஆனையிறவு கைப்பற்றலும் அமைந்தது . இதில் குடாரப்பு தரையிறக்கமும் பின்பு கேணல் பால்ராஜின் தலைமையில் நடந்த இத்தாவில் சமரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

குடாரப்பு தரையிறக்கத்தை நோர்மண்டி தரையிறக்கத்துடன் இராணுவ ஆய்வாளர்கள் ஒப்பிடுவர். விடுதலைப்புலிகளால் ஈழத்தின் எந்த மூலையிலும் தங்கள் படைகளை இறக்க முடியும் என்பது அன்று நிரூபிக்கப்பட்டது. இவ்வாறான ஒரு தரையிறக்கம் கருணாவின் கலகத்தினை அடக்குவதற்கு வெருகல் ஆற்றிற்கு அப்பால் உள்ள பகுதியிலும் பின்பும் நிகழ்ந்தது.

குடாரப்பில் தரையிறங்கிய படையணிகள் இத்தாவில் பகுதியில் நிலையெடுத்தன. அங்கு நடந்த சமர் விடுதலைப்புலிகளின் சண்டையிடும் உச்ச திறனை வெளிப்படுத்திய சமர். உலக வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத நிகழ்வு அது. சரியான வினியோகப் பாதைகள் இன்றி நாற்பதினாயிரம் படைகளுக்கு நடுவில் நின்று பல வாரங்கள் 1500 விடுதலைப் புலிகள் சண்டை செய்தனர். கேணல் பால்ராஜை உயிருடன் பிடிப்பதா, அல்லது பிணமாக பிடிப்பதா என ஆராய்ச்சி செய்தபடி வந்த சிறிலங்கா படையினர் பெருத்த அவமானத்தோடு அடி வாங்கி ஓடினர். பல முறை முயன்றும் இத்தாவிலில் நிலைகொண்டிருந்த புலிகளை அவர்களால் அசைக்க முடியவில்லை. இந்தச் சமரைப் பற்றி பரணி பாடுதல் தகும்.

பின்பு கேணல் தீபனின் தலைமையிலான படையணிகள் முன்னேறி வந்து இத்தாவிலில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டனர். அதன் பிறகு ஆனையிறவை கைப்பற்றும் பெரும் சமர் தொடங்கியது. ஏற்கனவே பல இடங்களில் அடி வாங்கி உளவியல்ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவம் உயிர் தப்பி ஓடியது. ஆனையிறவு சமருக்கு ஒருங்கிணைப்பு தளபதியாக விளங்கிய கேணல் பானு ஆனையிறவில் புலிக் கொடியை ஏற்றினார்.

ஆனையிறவுச் சமருக்கான முற்றுகைச் சமரிலும், குடாரப்புத் தரையிறக்கத்திலும் கேணல் சூசை தலைமையிலான கடற்புலிகள் பெரும் பணி ஆற்றினார்கள். கடற்புலிகள் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டதிற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்கள். ஓயாத அலைகள் மூன்றில் ஏற்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் கேணல் பானு தலைமையிலான கிட்டு பீரங்கிப் படையணி ஒரு பெரும் காரணமாக இருந்தது. கிட்டு பீரங்கி படையணியின் துல்லியமான எறிகணை தாக்குதல்கள் சிங்கள இராணுவத்தை கிலி கொண்டு ஓட வைத்திருந்தன.

விடுதலைப்புலிகளால் பெரும் தளங்களையும் நகரங்களையும் கைப்பற்றி தக்க வைக்க முடியும் என்பதை நிருபத்த ஓயாத அலைகள் மூன்றில் கருணாவின் பங்கு என்பது மிக மிகச் சிறியதே. இந்தச் சமர் ஏறக்குறைய விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும் பங்கு கொண்ட சமர். அனைவரும் தேசியத் தலைவரால் தமக்கு கொடுக்கப்பட்ட பகுதிகளை சரியாக செய்து தமிழினத்திற்கு பெரும் வெற்றியை தேடித் தந்தனர்.

ஓயாத அலைகள் மூன்றிலாவது கருணாவின் பங்கு சிறியளவில் இருந்தது. சிறிலங்கா படைகளை போரே செய்ய முடியாதபடி மொத்தமாக முடக்கிப் போட்ட “தீச்சுவாலை” சமரில் கருணாவின் பங்கு எள்ளளவும் இருக்கவில்லை. “தீச்சுவாலை நடந்த பொழுது கருணா மீண்டும் கிழக்கு திரும்பியிருந்தார்.

ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா அரசு “தீச்சுவாலை” என்னும் பெயரில் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. கிளாலி, முகமாலை, நாகர்கோவில் ஆகிய இராணுவத் தளங்களில் இருந்து இந்த படையெடுப்பு நடந்தது. பெரும் எடுப்புக்களுடன் சிறிலங்கா இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஓரே நாளில் முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளால் ஒரு தரைச் சண்டையில் எதிரிக்கு குறுகிய நேரத்தில் எவ்வகையான இழப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதை உலகம் கண்ட சமர்களாமாக “தீச்சுவாலை” அமைந்தது. ஏறக்குறைய ஆயிரம் படையினர் இறந்தும் மூவாயிரம் படையினர் காயமடைந்தும் போனார்கள். சிறிலங்கா இராணுவம் பெயர் சூட்டி ஆரம்பித்த நடவடிக்கைகளில் தீச்சுவாலை மட்டும்தான் ஒரு சிறு நிலபரப்பைக் கூட கைப்பற்றாது முடிந்து போனது. அது மட்டுமன்றி முதல் முறையாக தங்களின் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக எவ்வித சப்பைக்கட்டும் கட்டாமல் சிறிலங்கா அரசு வெளிப்படையாக அறிவித்ததும் அதுவே முதற் தடவையாக இருந்தது. இனியும் சண்டைகள் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தால் இழப்புக்களை சமாளிக்க முடியாது போகும் என்று சிறலங்கா அரசு கூறியது. இந்தச் சமரில் விடுதலைப்புலிகளும் பல புதிய யுக்திகளை கையாண்டார்கள். எறிகணைத் தாக்குதல் மூலம் சிங்கள படையினரை கண்ணிவெடி வயல்களுக்குள் ஓட வைத்து பெரும் இழப்பை ஏற்படுத்தினர்கள். உலக சரித்திரத்தில் முதற் தடவையாக தற்காப்புத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் கண்ணிவெடிகள் ஒரு வலிந்த தாக்குதலுக்கு பயன்பட்டதாக மாமனிதர் தாரகி எழுதியிருந்தார். இவ்வாறு இந்த சமர் பல “முதற் தடவைகளை” கொண்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க “தீச்சுவாலை” எதிர்ச் சமரை தீபன் தலைமை தாங்கியிருந்தர். சார்ள்ஸ் அன்ரனி படையணி, சோதியா படையணி, மாலதி படையணி ஆகிய படையணிகள் இதில் பங்கு கொண்டன.

ஆகவே ஊன்றிக் கவனிக்கையில் கருணாவும், அவரை சார்ந்தவர்களும் சொல்வது போல் விடுதலைப்புலிகளின் சண்டைகள் எதுவும் கருணாவில் தங்கியிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் பெற்ற பெரு வெற்றிகள் கருணா இல்லாமலேயே பெறப்பட்டன. கருணாவை விட பல மடங்கு திறமையும் அனுபவமும் கொண்ட தளபதிகளை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றிருக்கிறது.

உலகத்தில் எந்த இனமும் பெற்றிராத ஈடு இணையற்ற பெரும் இராணுவ வல்லுனராகிய தேசியத் தலைவர் பிரபாகரனையும் நூற்றுக் கணக்கான வீரத் தளபதிகளையும் கொண்டிருக்கும் தமிழினத்திற்கு, கருணாவால் எவ்விதத்திலும் சவால் விட முடியாது.

கேணல் பால்ராஜ், கேணல் தீபன், கேணல் பானு, கேணல் சொர்ணம் போன்றவர்களின் வரிசையில் இருந்த கருணா, தற்பொழுது ராசிக், புளொட் மோகன் போன்றவர்களின் வரிசையில் இருக்கின்றார். ஆனால் ராசிக், புளொட் மோகன் போன்றவர்களோடு ஒப்பிடுகின்ற பொழுது கருணா அங்கும் ஒரு கற்றுக்குட்டியே!

தமிழினம் காலத்திற்கு காலம் பல துரோகிகளை சந்தித்து வந்திருக்கிறது. அதில் சிலர் திறைமைசாலிகள் ஆகவும், ஓரளவு தனித்துவத்தோடு இயங்கக்கூடியவர்கள் ஆகவும் இருந்துள்ளார்கள். சிலர் வெறும் சாவி கொடுத்த பொம்மைகளாக மட்டும் இருந்துள்ளார்கள். இதில் கருணா இரண்டாவது ரகம்.

சில வருடங்களுக்கு முன்பு அரசியல்ரீதியாக தமிழர் விடுதலைக் கூட்டணியும், இராணுவரீதியாக மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்களும் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். யதார்த்தத்தை உணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைந்து விட்டது. மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அந்த வகையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு சிங்கள அரசு டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா போன்றவர்களை பயன்படுத்திவருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அரசியல்ரீதியான செயற்பாடுகளுக்கு ஆனந்தசங்கரியை தலைமை ஏற்க செய்வதற்கு இந்திய அரசும், சிங்கள அரசும் முயன்றன. ஆனால் ஆனந்தசங்கரியோ அவரது உற்ற துணையாக இருந்த கதிர்காமர் கொல்லப்பட்ட பின்பு, செய்வது அறியாது தடுமாறி வருகிறார். தற்பொழுது ஆனந்தசங்கரி உல்லாசப் பயணங்கள் செய்தும் கடிதங்களை எழுதியும் பொழுதை போக்கி வருகிறார்.

டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் ஆதரவு என்பது துளி கூட இல்லாத ஒருவர் என்பது பல முறை அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. டக்ளஸ் தேவானந்தா எத்தனை அமைச்சர் பதவிகள் வகித்தாலும், அவரை மரபு கருதி சந்திக்கின்ற ராஜதந்திரிகள் கூட அவரது கருத்துக்களை கேட்பதோடு விட்டுவிடுகிறார்கள். அரசியல்ரீதியாக எதையும் சாதிக்க முடியாத டக்ளஸின் ஈபிடிபி யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இராணுவத்தின் துணைப்படையாக மட்டும் செயற்பட்டு வருகின்றது.

இவர்களில் தமிழின எதிரிகள் அதிகம் நம்பியது கருணாவையே. கருணா துரோகம் இழைத்த பொழுது மிகப் பெரிய ஒரு சக்தியாக சிங்கள அரசின் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். அரசியல்ரீதியாகவும், இராணுவரீதியாகவும் விடுதலைப்புலிகளுக்கு சரியான சவாலாக கருணா இருப்பார் என்று சிறிலங்கா அரசு அக மகிழ்ந்திருந்தது. ஆனால் இன்று ராசிக்கின் இடத்தைக் கூட நிரப்ப முடியாத ஒரு நிலையிலேயே கருணா உள்ளார்.

ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இருந்து பின் தனித்து இயங்கிய ராசிக் கிழக்கில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு ஓரளவு சவாலாக விளங்கியவர் என்பது உண்மை. ராசிக் குழு சட்டப்படி சிறிலங்கா அரசின் துணைப்படையாக இணைக்கப்பட்டிருந்தது. ஆயினும் ராசிக் குழுவுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் இருந்தது. தமிழ் மக்களை துன்புறுத்துவதிலும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுப்பதிலும் ராசிக் குழு சிறிலங்கா இராணுவத்திற்கு பெரும் துணையாக செயற்பட்டு வந்தது. யுத்த காலத்தில் கூட ராசிக்குழுவால் சில புலனாய்வு வேலைகளில் ஈடுபட முடிந்தது. அது மட்டுமன்றி ராசிக் கிழக்கிலேயே வசித்து வந்தார். பலத்த பாதுகாப்போடு கிழக்கில் நடமாடிய ராசிக்கை நெருங்குவது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. கடைசியில் ஒரு தற்கொலைத் தாக்குதல் மூலம் ராசிக் கொல்லப்பட்டார். ஒரு தமிழினத் துரோகியை அழிப்பதற்கு விடுதலைப்புலிகளால் தற்கொலைத் தாக்குதலை நடத்த வேண்டி வந்தது ராசிக் விடயத்தில் மட்டுமே.

ராசிக், மாணிக்கதாசன் போன்றவர்களோடு ஒப்பிடும் பொழுது விடுதலைப்புலிகளுக்கு கருணா ஒரு பொருட்டே அல்ல. தற்பொழுது ஈழத்தில் செயற்படும் துரோகக் குழுக்களில் மிகக் குறைந்த உறுப்பினர்களை கொண்டிருப்பது கருணா குழுவே. மற்றைய குழுக்களின் தலைமைகள் ஈழத்தில் இருந்து செயற்பட, கருணா மட்டும் இந்தியா, சிங்கப்பூர் என்று நாடு நாடுகளாக ஓடித் திரிகின்றார்.

இதில் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான கேணல் கருணா ராசிக், மாணிக்கதாசன் போன்றவர்களை விட திறமையானவர்தான். காரணம் அந்தக் கருணாவிற்கு தேசியத் தலைவரின் வழிகாட்டல் இருந்தது. ஆனால் ஓடிப் போன கருணா தற்பொழுது செய்துவரும் வேலையில் திறமைசாலி அல்ல. சுருங்கச் சொன்னால், நாங்கள் பெறுமதி மிக்க எதையும் இழக்கவும் இல்லை. எதிரிகள் பெறுமதி மிக்க எதையும் பெறுவும் இல்லை. கருணாவாற்தான் விடுதலைப்புலிகள் வெற்றிகளைக் குவித்தார்கள் என்பதும் மாயை. இன்று விடுதலைப்புலிகளுக்கு கருணா ஒரு அச்சுறுத்தலாக விளங்குகிறார் என்பதும் மாயை. அத்தோடு கிழக்கில் கருணாவிற்கு மக்களின் ஆதரவு உள்ளது என்று இருந்த மாயையும் நடந்து முடிந்து உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளால் அடிபட்டுப் போய்விட்டது.

கருணா ஒவ்வொரு நாடாக ஓடிக் கொண்டிருக்கு, அவருடைய குழு உயர்பாதுகாப்பு வலையங்களில் இருந்தபடி, சிங்கள இராணுவத்தின் கட்டளையை செயற்படுத்திக்கொண்டு இருக்கிறது. கருணா குழுவோடு ராசிக் குழு, ஈஎன்டிஎல்எவ் போன்ற குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. கருணா குழுவை ஒரு சக்தியாக காண்பிப்பதற்காக, சிறிலங்கா இராணுவம் கருணா குழுவினரை உள்ளடக்கியபடி சில தாக்குதல்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 12 ஆம் திகதி கருணா கிழக்கை விட்டு முற்றாக விரட்டியடிக்கப்பட்டார். அதை நினைவுகூரும் விதமாகவும், கருணா குழுவின் இருப்பை காட்டும் விதமாகவும், சிறிலங்கா இராணுவம் வரும் வாரங்களில் மீண்டும் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தும். இவைகளை வைத்து கருணா பற்றிய மாயையை கட்டிக்காக்க முனையும்.

ஆனால் உண்மையில் கருணா குழு என்பது தனித்து இயங்குவதற்கு வல்லமையை எவ்விதத்திலும் கொண்டிருக்கவில்லை. ஆட் பலமோ, ஆயுத பலமோ, மக்கள் ஆதரவு சிறிதளவு கூட இல்லாது ஒரு ரௌடிக் கும்பல்தான் கருணா குழு.

80களிலும் 90களிலும் துரோகக் கட்சிகள், இயக்கங்கள் என்று இருந்தவை இன்று குழுக்களாக சுருங்கி விட்டன. அன்று விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களை விட இன்று இருக்கின்ற கருணா, டக்ளஸ் போன்றவர்கள் எல்லா விதத்திலும் பலவீனமானவர்கள். வெறும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள். இந்த பொம்மைகளால் எந்தக் காலத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஒரு சவாலாக மாற முடியாது. இந்தப் பொம்மைகளை பற்றி வெறும் பிரம்மைகளே உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுக்கதைகள் மூலம் பலமானவர்களாக இவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார��
�கள். இவர்களை சிறிது கூர்ந்து கவனித்தாலே இந்த மாயை உடைந்து விடும்.

1988ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் கைக்கூலியாக வரதராஜப்பெருமாளும் பத்மநாபாவும் செயற்பட்டார்கள். துரோகிகளின் அன்றைய கதாநாயகாகள் அவர்கள்தான். அன்று அவர்கள் தமிழ் தேசியப் இராணுவம் என்னும் பெயரில் பிள்ளை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். இன்றைய கதாநாயகனாகிய கருணா தமிழ் தேசியப் படை என்னும் பெயரில் பிள்ளை பிடிக்கும் வேலையை செய்கிறார். இன்று வரதராஜப்பெருமாள் சீண்டுவாரற்று அநாதையாக கிடக்கிறார். பத்மநாபா கொல்லப்பட்டு விட்டார். இவர்களைப் பற்றி தமிழ் மக்கள் யாரும் இப்பொழுது பேசுவதில்லை. சிறிது காலம் கழித்து கருணாவைப் பற்றியும் தமிழ் மக்கள் பேச மாட்டார்கள்.

கரிநாகம் கருணா போனால் மட்டகளப்பு போய்விடும் என்று நினைத்தால்?

விக்டர் அண்ணா போன பின் நாம் மன்னாரை இழந்து இருக்க வேனும் புலேந்தி அம்மான் போன பின் நாம் திருமலையை இழந்து இருக்கவேனும் மாறாக அவர்கள் இறந்த பின்னும் உரமாகதான் இருந்தார்கள்…….

ஆணால் யாரும் வேறும் எளும்பு கூடு ஆக போகவில்லை ஒவரு தளபதியின் இறப்பும் தாங்க முடியாத துன்பம் தான் ஆணால் அவர்கள் விட்டு சென்ற வெற்றியும் வீரமும் எமக்கு மேலும் மேலும் பல போராளிகளை தந்தது…….

நீ மட்டும் ஏதோ நாய் மாதிரி குரைச்சுது யாழ்ப்பாணத்தான் மட்டகளப்பான் என்று கடசியில் மட்டகளப்பு போராளிகளிடமும் தளபதிகளிடமும் அடி வாங்கி(சும்மா அடி இல்லை எங்க வீட்டு அடி உங்கள் வீட்டு அடி இல்லை செம அடிதான் கருணாக்கு ஜனனாயகம் சொல்லி கொடுந்த ஆக்கள் tongue.gif tongue.gif tongue.gif

இப்ப இருக்க ஒரு இடமும் இல்லாமல் ஊர் ஊரா ஒடி திரியுது அவன் சிங்களவனும் தொப்பி முக்காடும்களும் இந்த நாய்யின் பெயரை சொல்லி கொண்டு விளையாடுதுகள்…..

இந்த நாய் என்ன செய்யுது 6 மில்லியன் ருப்பிஸ் காசை கொண்டு வைக்கவும் இடம் இல்லாமல் சீங்கபூர். இந்தியா என்று அலையுது,,,,

கருணா ஒடு கண்ணா ஒடு எங்கள் பொட்டு அம்மான் சிரிக்கா முன் ஒடி தப்பு பொட்டு அம்மான் சிரிக்க தொடங்கினால் நீ எரிந்து விடுவாய் கண்ணா.

உனக்கு அழிவுகாலம் இன்று தொடங்க வில்லை எப்போ நீ ராஜன் சத்தியமுர்த்தியின் அன்பு கிடைத்ததோ அன்றே உனது அழிவுகாலம் பிறந்து விட்டது…..

எனது ஆசை வேற ஒன்றும் இல்லை உனது அழிவு ஒரு மட்டக்களப்பு வீரனால் தான் கிடைக்கவேனும் அதுவும் மட்டக்களப்பில்(கிழக்கில்)

நன்றி எனது கருத்தை எழுதுவதுக்கு சந்தர்ப்பம் தந்த யாழ்களத்துக்கு

உண்மையில் அந்த மண்ணின்மக்களுக்கு துரோகம் செய்த துரோகிகளுக்கு அந்தமக்களாலேயே தண்டனை வழங்கப்படவேண்டும்.
தம்பி சசி தொடர்ந்து எழுதுன்கோ. அப்பதான் உந்தக் காக்கைவன்னியன் பற்றி சனத்துக்கு விளங்கும்
என்ன கந்தப்பு அண்ணை இவரை பற்றி எழுத என்ன மாதக்கனக்கா தேவை?

5000ம் 6000ம் போராளிகளை வச்சு மட்டக்களப்புல ஆனையிறவு தானே பிடிச்சவர்?

அதுவும் உங்களுக்கு தெரியுமோ தெரியாது நியூட்டன் என்று ஒரு புலனாய்வு பொறுப்பாளரும், நீலன் என்ற புலன்னாய்வு பொறுப்பாளரும் தான் கரிநாகம் கருணாக்கு பெரும் உதவியாக இருந்தவர்கள் மட்டக்களப்பில்………

எத்தனை திறமையான தளபதிகளை அடக்கி வச்சு இருந்தவர் இவர் அவர்கள் சொல்லவும்(தலைவருக்கு) முடியாமல் கஷ்டப்படவர்கள்………….

ஒரு தளபதி (பெயர் மறந்து விட்டேன்) அவர் உயிரோடு இருந்தால் கருணா கிழக்குக்கு மாவட்ட தளபதியாக வந்து இருக்கமடார் என்று ஊரில் சொல்லுவர்கள்…………

கந்தப்பு
துரோகி கருனாவின் மறுபக்கம் 4

கயவன் கருனாவின் முதல் படுகொலை கருனா மட்டக்களப்பு மாவட்டத்தில் புலனாய்வுத்துறை பொறுப்பெடுத்தவுடன் தலமைப்பீடத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காவவும் தனக்கு இயக்கத்துக்குள் ஒர் பலமான இடத்தை பிடிப்பதற்காகவும் தனது கபடத்தான சிந்தனையுடன் தனது புலனாய்வு நடவடிக்கைளை மேற்கொண்டான்.

தான் பிறந்த கிராமமான கிரானில் மக்களிடம் தனக்கு செல்வாக்கு வேண்டும் மற்றும் எல்லோரும் தன்னை கண்டால் பயபக்தி அவர்களுக்குள் ஏற்படவேண்டும் என்றும் கருணா நினைத்தான். இதற்காக பினைத்தைத் தேடும் ஒநாய் போல அலைந்தான். அவ்வேளையில் கருனாவின் வலையில் சிக்கினான் கிரானைச்சேர்ந்த அப்பாவித்தமிழன்.

அந்த பொது மகன் சயனைட் வைத்திருந்தான் என்றும், தான் இயக்கபோராளி என்று எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருந்தான் மற்றும், தனிப்பட்ட ரீதியான செயல்கள் செய்தான் என்றும் கருனாவால் கைது செய்யப்பட்டான்.

அந்த பொதுமகனை கருணாவும் சந்திவெளியை சேர்ந்த மதியும் சித்திரவதை செய்தனர். மதி என்பவன் கருணாவின் தனிப்பட்ட விசுவாசியாகயிருந்தவன். அந்த மதி யார்? அவனின் பின்னனி என்ன? இறுதியில் அந்த துரோகியின் கதி என்ன என்றெல்லாம் பிற்பகுதியில் பார்ப்போம்.

மேலும்,அந்தப்பொதுமகனை மதி மண்வெட்டியால் அடித்து கொன்றான். ஒரு இராணுவ உளவாளியை தாம் கைது செய்து கொன்று விட்டதாக கருணா கதைபரப்பினான்.

இப்படுகெலையை மட்டக்களப்பின் தமிழிழவிடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான மாவீரர் ஜீம்கலித்தாத்தா கடுமையாக எதிர்த்தார். இப்படுகொலைச்செய்த மதியை இயக்கத்தை விட்டே துரத்த வேண்டும். கருணாவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஜிம்கலித்தாவும் கிரானை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பித்தக்கது. இதனால் கருனாவுக்கும் ஜிம்கலித்தாவுக்கும் முறுகல் நிலை கூட ஏற்பட்டது. அப்போது ஜிம்கலித்தாவின் குரல் எதிரொலிக்கவில்லை.

அப்போதைய சூழ்நிலையில் உண்மையான நிலை தலைமைப்பீடத்திற்கு கருணாவால் கூறப்படாமல் மறைக்கப்பட்டது. கருணாவின் காட்டில் மழை!
கருணா கயவனாக இனி காலடி வைக்க தொடங்கிறான் ஆதலால் இனி கயவன் என்றே தொடரலாம்…
கருணாவும் மதியும் அதாவது கயவர்கள் இருவரும் நமட்டு சிரிப்புடன் கைகுழுக்கிக்கொண்டார்கள். எப்படி இனிக் காய்களை நகர்த்துலாம் என கருணா என்ற அந்தக்கயவன் ஆழமாகச்சிந்தித்தான்.

பல கயவத்தனங்கள் அவன் சிந்தனையில் நிழலாடினாலும் தான் இயக்கத்தில் வேகமாக வளரவேண்டும் தன்னை நிலப்படுத்த என்ன செய்யலாம் என திட்டமிட்டான்.

பொறுத்திருங்கள் மட்டக்களப்பு வருங்கால தளபதியாக வரவிருந்த கிரானை சேர்ந்த ஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின் காட்டிக்கொடுப்பும்!
தொடரும்…..

ஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின் காட்டிக்கொடுப்பும்!ஜிம்கலித�
��தாவும் கருணாவின் ஊரான கிரானனைச்சேர்ந்தவர்தான். இவரது குடும்பத்திற்கு அவ்ஊரில் பெரும்மதிப்பிருந்தது.அது மட்டுமல்ல தமிழினப்பற்றுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.ஏனனில் துரோகி கருணாவின் குடும்பத்தினர் ஜக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்கள். அந்தக்கட்சியின் கொள்கையுடனே செயற்பட்டனர். பிற்காலத்தில் கருணாவின் சகோதரிகள் ஜக்கியதேசியக்கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி அரசவேலைகளிலும் அமர்ந்தனர். இது கிரானில் உள்ளளர்களுக்கு தெரிந்த ஒரு விடயம்.

மேலும்,கருணாவின் சகோதரி ஒருவர் ஜக்கியதேசியக்கட்சியியுள்ளவ��
�ும் முஸ்ஸிம் காங்கிரஸ் ஆதரவாளருமான ஒரு முஸ்ஸிம் செல்வந்தரைத் திருமணம் செய்து முஸ்ஸிம் மதத்தை தழுவி முதூரில் வாழ்கின்றார். மேலும், அவ் முஸ்ஸிம் செல்வந்தர் ஜிகாத் அமைப்பின் தீவிர ஆதரவாளராக தற்போதும் செயல்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

மேலும், ஜிம்கலித்தாத்தாவுடன் ஆரம்பத்திலே குடும்ப ரீதியாக கருணாவுக்கும் பகை இருந்து கொண்டேயிருந்தது. ஜிம்கலித்தாவுக்கு கிரானில் மட்டும் அல்ல சகபோராளிகளிடத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரத்தொடங்கியது. இது கருணாவின் மனதை பெரிதும் பாதித்தது மட்டுமல்ல சங்கடத்தையும் கொடுத்தது.

கிரான் மக்கள் மட்டுமல்ல மற்றவர்களும் தன்னையே ஒரு தளபதியாக கருதவேண்டும் கிரான் மக்களினதும் சகபோரளிகளினதின் மனதிலிருந்து ஜிம்கலித்தாவை துக்கியெறியவேண்டுமென்றும் பல தனிப்பட்ட காரணங்களால் தாத்வை பழிவாங்க துரோகி கருனா காத்திருந்தான்..!

அதற்கு சந்தர்ப்பம் 1986ன் ஆண்டளவில் வந்தது. நான்கு அல்லது ஜந்து கிலோ மீற்றர் துரத்த்திற்குள் தற்போது புலனாய்த்துறைப் பொறுப்பாளராகவுள்ள பொட்டம்மானின் முகாம் உட்பட பல முகாம்கள் இருந்த போதிலும் ஜிம்கலித்தாவின் முகாமே சிங்கள இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டது.

தனது தன்னிச்சையான அராஜக நடவடிக்கைக்கு பொட்டமான் உட்பட பல தளபதிகள் எதிராகயிருந்த போதும் தனது முதல் எதிரியான ஜிம்கலித்தாவே கருனா குறி வைத்தான். எனவே தான் தனது காட்டிக்கொடுப்பு நடவடிக்கையை ஜிம்கலித்தாவின் முகாமிலே செய்தான். ஆனால் வேறு சில நபர்கள் ஜிம்கலித்தாவின் முகாமை வேவு பார்க்க சிங்கள இராணுவத்தால் அனுப்பட்டு அவர்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டது. அவர்கள் பணத்தை அவர்களுக்குள் பங்கீடு செய்யும் போது எற்பட்ட குழறுபடியால் இக்கதையை கசிய விட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்து. இருப்பினும் இப்படியான ஒரு முகாம் இருப்பதையே சிங்கள இராணுவத்தினருக்கு காட்டிகொடுத்தவன் துரோகி கருணாவாகும். அதன்பின்னர்தான் ஜிம்கலித்தாவின் முகாமை வேவு பார்க்க சிங்கள இராணுவத்தினரால் அந் நபர்கள் அனுப்பட்டனர்.அவர்கள் மாடு தேடுவர்கள் போலவே சென்றனர்.

மேலும்,கருணா எந்த முறையில் சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்தான் என்பது தெரியாது. ஆனால் துரோகி கருணாவின் வடமுனையைச் சேர்ந்த உறவுக்காரர் ஜிம்கலித்தாவின் முகாம் எப்படி காட்டிகொடுக்கப்பட்டது என்பதனை மதுபோதையில் உளறினார். இவர் மதுபோதையில் உளறுகின்றார் என்றும் ”குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு”என்று கூறி அந்நபரை பின்னர் துரோகி கருணாவின் சகாக்கள் அடித்து நொறுக்கினர் பின்னர் அவர் வாய்திறக்கவில்லை! அதன் பிறகு அந்நபரும் கானாமல் போய்விட்டார்.

மேலும், இச்சுற்றிவளைப்பில் ஜிம்கலித்தாத்தா உட்பட மெட்டைகஜன் மற்றும் கிரானை சேர்ந்த 6 போராளிகளும் மற்றும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மட்டக்களப்பில் வசித்து பின்னர் போராளியான ஓருவர் உட்பட பத்து பேர் வீரச்சாவடைந்தனர்.

மேலும்,இச்சுற்றிவளைப்பு லெப்.கேணல் குமரப்பா தலமையில் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..,இச்சுற்றிவளைப்பில் செங்கலடியைச்சேர்ந்த சீனிப்போடியாரின் மகனான சுதா (தற்போது நோர்வேயில் வசிக்கிறார்)மற்றும் வழைச்சேனையைச்சேர்ந்த கப்டன் வில்லியம் போன்றோர் தப்பினர்.மேலும் சுதா சயினைட் அருந்தி உயிர்தப்பியவர் என்பது குறிப்பிடதக்கது. அந்த காலபகுதியல் மிகப்பெரிய சுற்றிவளைப்பாகவே இது கருதப்பட்டது.

மேலும், ஜிம்கலித்தா எதிரியுடன் கடைசிவரை போராடி இறுதில் வீரச்சாவை அடைந்தார்.ஜிம்கலித்தாவின் தற்கொடை உணர்வும் தேசியப்பற்றும் தென்தமிழிழமக்களிற்கு எடுத்துக்காட்டும் கிரான் மண்னே பெருமை கொள்ள கூடியதும் போற்றக் கூடியதுமான ஒரு மாவீரருமாவார்.

மேலும், ஜிம்கலித்தாவின் CZ பிஸ்டல் 1990யில் கருனாவால் கண்டெடுக்கப்பட்டு அது பிற்பகுதியில் ஒரு அயோக்கியனுடனிடம் ஒப்படைக்கப்பட்டு அது எந்த வழியில் பயன்பட்டது என்று வரும் தொடர்களில் பார்ப்போம். பொறுத்திருங்கள் கருணாவின் கிரிமினல்கள் தொடரும்

கப்டன் பிரான்சிஸின் தியாக வேட்கையும் கருணாவின் தீயசெயலும்

யார் இந்த பிரான்சிஸ்?
இலட்சியவாழ்வு!
தளர்விளா உறுதி!
தலமைத்துவ விசுவாசம்
வீரம், ஈகை, தியாகம், அர்ப்பணிப்பு

இதுவெல்லாம் நிரம்பப் பெற்றவன்தான் உண்மையான போராளியாகயிருக்க முடியும். இதற்கு தகுதியுள்ளவன்தான் இந்த பிரான்சிஸ். தேசியத் தலைவரின் அன்புக்குரியவன் கேணல் கிட்டுவின் தோழமைக்குரியவன். தூரநோக்குக் கொண்ட தீர்க்க தரிசன ஒரு அரசியல் போராளி என்றே இவனைக் கருதலாம்.

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு என்னுமிடத்தில் சடாட்சரபவான் என்ற இயற்பெயருடன் பிறந்த இவன் தனது சிறுவயதிலிருந்தே ஆரம்பக் கல்வியில் மிக தேர்ச்சியுள்ளவனாவே இருந்தான்.

இயற்கையாகவே தமிழ்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட இவன் தமிழ் இளைஞர் பேரவையின் ஆதரவாளராகயிருந்தான்.

இக்காலகட்டத்தில் தனது மேற்படிப்பை அம்பாறை காடி தொழில்நுட்பக் கல்லூரியிலும் கொழும்பு கட்டுப்பத்தை தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றான். தனது கல்விக்காலத்தில்கூட மட்டக்களப்பு அரச சிறையிலிருந்த இவன் வாழ்க்கைப்படிகளில் பல சிக்கல்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு நடந்த இந்த இலட்சியவாதிக்கு தான் செல்லும் பாதைக்கும் இலட்சியத்திற்கும் ஊன்றுகோலாக ஆணிவேராகவும், அத்திவாரமாகவும், பக்கபலமாகவும் தன்னை நிலைப்படுத்தி தனது கொள்கையை மேன்படுத்த இலட்சியம் தவறாத ஒரு மாபெரும் சக்தி தேவைப்பட்டது.

ஆம், அந்த மாபெரும் சக்தியான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1982ல் தன்னை இணைத்துக்கொண்டான். இந்த மாவீரனின் இயக்க வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியிலும் சக போராளிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது உண்மையே!

1983இல் பயிற்சிக்குச் செல்லும் போராளிகளுக்கு மட்டு அம்பாறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டான். இவனது இயக்க அரசியல் வகுப்புக்கள் தன்னிகரானது. தனித்துவமானது. இவனது இயக்க அரசியல் போதனையால் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இயக்கத்துக்குள் காலடி எடுத்துவைக்க ஏதுவாகயிருந்தது என்பது மறக்கமுடியாதது.

1983 காலப்பகுதியில் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடந்தது. அதில் இயக்க ஆதரவாளர் நிர்மலாநித்தியானந்தன் அச்சிறையுடைப்பு சம்பந்தப்பட்டவர்களின் திறமையற்ற நடவடிக்கையால் கைவிடப்பட்டார்.
1984இல் மீண்டும் அதை கப்டன் பிரான்சிசும், பசில்காக்காவும் இரண்டு கைத்துப்பாக்கியுடனே இதைச்செயல்படுத்தி நிர்மலாநித்தியானந்தனை மீட்டு பொலநறுவை வழியாக மதவாச்சி சென்று அங்கிருந்து மன்னார் புநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கு பக்குவமாககொண்டு சேர்த்தனர்.

இந் நடவடிக்கையானது அக்காலப் பகுதியில் பெரிய ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது.எனவேதான் அவ்விடயம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

1984 காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம்வரை பிரான்சிஸின் இயக்கவேலைகள் பரந்திருந்தன. அக்காலப் பகுதியில் தேசியத்தலைவரைச் சந்திப்பதும் கேணல் கிட்டுவைச் சந்திப்பதுமாக இவர் இயக்கப்பணியில் வேகமாக ஈடுபட்டான். கேணல் கிட்டுவுடன் சேர்ந்து பல இயக்கப்பணிகளை யாழில் மேற்கொண்டு தலைவரிடத்திலும் நன் மதிப்பைப் பெற்றான்.

மேலும் கேணல் கிட்டுவின் நம்பிக்கையான தோழமைமிக்க அன்புமிக்க போராளியாகவும் கப்டன் பிரான்சிஸ் செயற்பட்டான்.

எனவே தமிழ் தேசியக் கொள்கைகளையும் ஒற்றுமைகளையும் அந்நாட்களிலேயே இவனது பரந்துபட்ட இயக்கப்பணியால் வளர்ச்சிகண்டது என்றும்கூட கூறத்தகுந்துதான்.

அரசியல் பணியில் மட்டுமல்ல எதிரிகள் மீதான முக்கியமானதாக அந்நாட்களில் கருதப்பட்ட பல தாக்குதல்களிலும் கப்டன் பிரான்சிஸின் பங்கிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் சிறிலங்கா பொலிஸ் நிலையத்தாக்குதலான கஞவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தாக்குதல் 1984லும் மற்றும் 1985ல் ஏறாவ+ர் பொலிஸ் நிலையத்தாக்குதல். 1984ல் தம்பட்டையில் மிகப்பெரிய தாக்குதலாக அப்போது பேசப்பட்ட STFஇனர் மீதான பதுங்கித் தாக்குதல் என்பன கப்டன் பிரான்சிஸின் பெயர் சொல்லக்கூடிய தாக்குதலாகயிருந்தது.

பிரான்சிஸின் இந்த இயக்க வளாச்சியையும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் செல்வாக்கையும் எப்படி தகர்த்தெறியலாம். அதற்கு என்னவழிவகை என கருணா என்ன கயவன் கணக்கிட்டான். அதுமட்டுமல்ல பிரான்சிஸிற்கு அருணா கொடுத்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலை எப்படியோ சதிசெய்து பறிக்கவும் திட்டமிட்டான்.

1987இல் இதற்கான செயலில் இறங்கிய கருணா மட்டக்களப்பு அம்பாறையைத் தனித்தனியாக பிரித்து அரசியல் வேலைசெய்யலாம் எனத் திட்டமிட்டான். இவ்விடயமானது அப்போதைய சுழ்நிலையில் சாதகமாகக்கூடிய வேலையல்ல! ஏனெனில் அத்திட்டமிடலானது அந்நாளில் இயக்கப்பணிக்கும் வளர்ச்சிக்கும் குந்தகமானதாகவே அமையும். இதனால் பலனடையப்போவது எதிரிகளும் எதிரிகள் சார்பான அரசியல்வாதிகளுமே என கப்டன் பிரான்சிஸ் அத்திட்டத்தை எதிர்த்தான்.

இதனால் கருணாவுக்கும் பிரான்சிஸிற்கும் கருத்துமுரண்பாடு வலுத்தது. இந் நிலையில் பிரான்சிஸ் தேசியத் தலைவரை நேரடியாகச் சந்தித்து நிலமையை எடுத்துதம்பினான். தேசியத் தலைவரும் கருணாவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை! எனவே பிரான்சிஸ் கூறுவது யதார்த்த ரீதியாகச் சரியானது என்றும் அதேபோல்ச் செய்யும்படி பிரான்சிஸிற்கு கூறினார். இதைக் கருணாவுக்கும் செயற்படுத்துமாறு தலைவர் கட்டளையிட்டார்.

இதனால் மனமுடைந்த கருணாவுக்கு தனது பிரித்தாளும் நடவடிக்கை புஸ்வானமானதையிட்டு பிரான்சிஸின் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. தனது குள்ள நரிப்புத்தியைப் பயன்படுத்தி பல காரணங்கள்கூறி அந்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலைப் பிரான்சிஸிடமிருத்து மிகவும் கபடத்தனமாக அந்த கபடதாரியான கருணா பறித்தெடுத்தான். அந்த பிஸ்டலுக்கு மாற்றீடாக ஒரு பிஸ்டலும் கொடுக்கவில்லை.

1988ல் 10ம் மாதத்தில் 31ம் திகதி பிரான்சிஸின் சொந்த ஊரில் IPKF சுற்றிவளைப்பு நடந்தது. இதில் பிரான்சிஸ் காலில் துப்பாக்கிச் சூடுபட்டு வீடொன்றின் புகைக்கூட்டில் மறைந்துகொண்டான். ஆனால் காலில் பீறிட்ட குருதி எதிரிக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. அந்நிலையால் கயவன் கருணாவின் சதியால் எதிரியை திருப்பிச்சுடுவதற்குகூட பிஸ்டல் இல்லாத நிலையில் சயனைட் அருந்தி அந்த வீரமறவன் தான் பிறந்து வளர்ந்த மண்ணிலே வீரச்சாவையடைந்தான்.

அந்த மண்ணும் பெருமையுடன் அந்த வீரனை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டது.

இறுதி நேரத்தில் கருணா பறித்த அந்த பிஸ்டல் பிரான்சிஸின் கைகளில் இருந்திருந்தால் அந்த மாவீரன் தன்னை தற்பாதுகாத்துக்கொள்ள ஏதுவாகயிருந்திருக்கும் என எல்லோரும் கருதினர்.

எது எப்படியோ! பலகாலம் தனது படிப்பு, பட்டம் என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு தன்னலம் கருதாது நாட்டின் விடுதலையே குறியாககொண்டு இலட்சிவேட்கையுடன் அதுவும் நகர்ப்புறத்தில் எதிரியுடன் அரசியல்போர் செய்த அந்த புலிமறவன் வீரச்சாவையடைந்துவிட்டான்.பலகாலமாக மட்டுநகரில் அரசியல் புயலாக வீசியவன் ஓய்ந்துவிட்டான்.

பிரான்சிஸின் வீரச்சாவுக்கு பின்னர் இயக்க வேலையின் நிமிர்த்தம் கொழும்புசென்ற பிரான்சிஸின் மூத்த சகோதரனான 2ம் லெப்டினன் சரவணபவான் அங்கு வீரச்சாவையடைந்தான்.அவருக்கு அங்கு உதவிக்குச் சென்ற உறவினர் சிலரும் இச்சம்பவத்தில் காணாமல் போனார்கள்.

இந் நிகழ்வானது 1989 IPKF காலத்திலேயே நடந்தது. கப்டன் பிரான்சிஸின் சகோதரர் 2ம் லெப். சரவணபவான் ஆரம்பகாலத்தில் இளைஞர் பேரவையின் உறுப்பினராயிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்டன் பிரான்சிஸின் சாவானது எதிரிக்கும் துரோகிகளுக்கும் கொண்டாட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான் ஆனால் கயவன் கருணாவின் நயவஞ்சகமான மனம் பல தடவை குதுகலத்தால் மத்தளமிட்டதை எவரும் அறிந்திடவோ புரிந்திடவோ சந்தர்ப்பம் இல்லை என்பது உண்மைதான்.

இச்சம்பவத்தால் பல பேர் வெறுப்படைந்து கருணாமேல் கோபமாயிருந்தாலும் பிரான்சிஸிற்கு கருணா செய்த வஞ்சகத்தன்மையை வெளிப்படையாக அந் நாட்களில் விமர்சித்தவர்களில் மேஜர் அன்ரனியும், றம்போ பிரசாத்துமாகும்.

இவர்களுக்கு கருணா செய்த சதி என்ன?

வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும்.

தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம்.
அம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்புலிகளில் தன்னை இனைத்து கொண்ட இவன் இந்தியாவில் 5 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டான். பல முனைத்தாக்குதலில் அரசபடைக்கெதிராக ஈடுபட்ட அன்ரனி IPKF காலத்தில் அம்பாறைத் தளபதியாகச் செயல்பட்டான். அவ்வேளைகளில் IPKF யினருக்கு எதிரான பல தாக்குதல்களை முன்னின்று செய்தவன் இவனாகும்.

தேசியத்தலைவர் மீது மேஜர் அன்ரனி வைத்திருந்த நம்பிக்கையும் விசுவாசத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டுச் சம்பவத்தை முன்வைக்கிறேன். அதாவது IPKF காலமது வன்னிக்காட்டிக்கு தேசியத்தலைவரைச் சந்திக்க அன்ரனி செல்கின்றான். அவ்வேளை கருணாவும் வன்னியில் நிற்கிறான். அன்ரனிக்கு நன்கு பழக்கமான போராளி ஒருவர் அன்ரனியிடம் கேட்கிறார்!

ஏன் அன்ரனி வன்னியில் IPKF ற்கு எதிராக நாம் சன்டையிடுவதைப்போல மட்டக்களப்பில் உள்ளவர்களால் சன்டை செய்யமுடியவில்லை!

என்ன காரணம்?

அதற்கு அன்ரனி புன்முறுவலுடன் அந்த போராளிக்கு ஒரு உதாரணக் கதையைக் கூறுகின்றான். அதாவது காட்டில் வேட்டை நாய் ஒன்று காட்டு முயலொன்றை துரத்துகிறது. முயல் ஒடிக்கொண்டேயிருக்கிறது.

கொஞ்சநேரத்தில் ஒரு புளியமரத்தின் கீழ் ஒடி நின்ற முயல் மீண்டும் புது வீரத்துடன் வேட்டை நாயை விரட்டுகின்றது. இதை எதிர்பார்க்காத வேட்டை நாய் பயத்தினால் திரும்பி ஓட்டம் பிடித்தது.

ஏனனில் முயலுக்கு வீரம் வந்த அந்த புளியமரத்தில் தானாம் வீரபாண்டியன் கட்டப்பொம்மனை ஆங்கிலேயர் துக்கிலிட்டனராம் அதனால் தானாம் அந்த முயலுக்கு வீரம் வந்தாம்.

ஏனனில் தேசியத்தலைவரின் அரவனைப்பிலும் நேரடிக்கண்காணிப்பிலும் உள்ளவர்களுக்கு ஒரு தனித்துவமான திறமையும் வீரமும் அங்கு ஊட்டப்படுகிறது மட்டுமல்ல நிழழாக அவர்களைப்படர்கிறது என்றே சொல்ல்லாம். அதன் பிரதிபலிப்புத்தான் வன்னிக்காட்டியில் IPKF யினர் வாங்கிய அடி!

இச்சம்பவத்தை மேஜர் அன்ரனி நாசுக்காக சுவாரசியமாக வேட்டைநாய் முயல் கதையாக அந்த போராளியிடத்தில் எடுத்துதம்பினான். இந்த நிகழ்வால் ஒன்றை புரிந்து கொள்ளாலாம் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி வைத்திருந்த விசுவாத்தையும் தலமையிடத்தில் அவனுகிருந்த நம்பிக்கைக்கும் இது ஒரு எடுத்துகாட்டாகும்.

அன்ரனிக்கு ஏற்கனவே பிஸ்டல் பழக்கப்பட்டது தான். ஆனாலும் அதில் பெரியளவு தேர்ச்சி பெற்றவனல்ல! தலைவரை அன்ரனி சந்திக்க சென்ற வேளையில் அவர் அன்ரனியையழைத்து பிஸ்டலால் இலக்கொன்றைச் சுடச் சொன்னார்.

தலைவருக்கு முன்னால் இலக்கைச் சுடுவதற்கு தயங்கி நின்ற அன்ரனியை அவர் அழைத்து தைரியம் ஊட்டி சுடக்கூறினார்.

அன்ரனிக்கு திரும்ப திரும்ப தலைவர் ஊக்கம் கொடுத்தார். இதனால் அந்த ஊக்குவிப்பால் அன்ரனியும் பிஸ்டலால் குறிபார்த்துச்சுடுவதலில் திறமையுள்ள வல்லுனரான தளபதியாகிவிட்டான்.

இச்சம்பவத்தை நேடியாக நோக்கிய கருணாவுக்கு அன்ரனி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகின. இவ்வேளையில் முல்லைத்தீவிப் பகுதில் IPKFனரின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இச்சம்பத்தில் எறிகனைத்தாக்குலில் ஈடுபட்டு தாக்குலை சிறப்பாக வெற்றியடையச் செய்து அன்ரனி துனைபுரிந்தான். இதனால் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி பாராட்டையும் பெற்றான்.

இக்கால கட்டத்தில் பயிற்சிப்பாசறை ஒன்றில் சகபோராளிகளுக்கு திறமையாக இராணுவப்பயிற்சியை அன்ரனி வழங்கினான்.

இதை நேரடியாக உற்று நேக்கிக்கொண்டியிருந்த கேணல் கிட்டு அன்ரனியை மிகவும் பாராட்டி ஒரு திறமைமிற்க கொமாண்டர் என்று தேசியத்தலைவருக்கு சிபார்சு செய்தார். இவ்வேளையித்தான் அன்ரனிக்கு தலைவர் M 203 ரைபிள் லேஞ்சர் வழங்கினார்.

தேசியத்தலைவராலும் முதி நிலைத்தளபதியாலும் சகபோராளிகளாலும் திறமையக பாராட்டப்பெற்ற அன்ரனியை நினைத்த துரோகி கருனாவின் உள்ளம் வஞ்சகத்தால் வேகமாகத் துடிப்பு கொண்டது. அந்த துரோகின் உள்ளமதில் ஆயிரம் கேள்விகள் துளைபோட்டன! அன்ரனி என்னை மிஞ்சி விடுவானோ?

எனது மதிப்பு இனிவரும்காலங்களில் குறைந்து விடுமா?

சீ!சீ! அப்படி நடக்காது! நடக்கவும் விடமாட்டேன் அந்த ஆயிரம் கேள்விகளுக்கும் உடன் விடை தெரியாமல் புனிதபுமி முகாமிலிருந்த உளுவிந்த மரமொன்றை தலையை பிய்த்தபடி பலதடவை கருணா என்ற அந்தக்காட்டு பன்றி வலம் வந்தது. இருப்பினும் அந்த பன்றின் மனம் குறிப்பெடுத்து கொண்டது. அன்ரனியை எப்படி ஓரம்கட்டி வீழ்த்தி பழிதீர்க்கலமென்று…!

…மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான்.

அம்பாறையில் ;IPKFயினருக்கும் தமிழ்தேசவிரோதக்கும்பலுக்கு எதிராக தாக்குதலலை துரிதப்படுத்தப்போவதாக சக போராளிகளிடத்தில் அன்ரனி எடுத்துக் கூறினான். இக்கூற்றுக்கமைய 1989ல் அம்பாறை மல்வத்தையில் IPKF யினர் மீது தாக்குதல் ஒன்றை அன்ரனி முன்னெடுத்து செய்தான். இதில் IPKF யினரைக் கொண்டு04 றைபிள்களும் கைப்பற்றினான்.

முன்னால் இலங்கை ஜனாதிபதி ரனசிங்க பிறேமதாசாவின் ஒப்பந்தக் காலப்பகுதில் IPKF யினர் முதலில் அம்பாறையை விட்டு வெளியேறிக் கொண்டியிருந்தனர். அக்காலப்பகுதியில் தமிழ் தேசவிரோதக்குழுக்கள் அம்பாறை திருக்கோவிலிலும், தம்பிலுவிலிலும் இரண்டு பெரிய முகாம்கள் அமைத்திருந்தனர்.

அந்த இரண்டு முகாம்களையும் அன்ரனி வேவு பார்த்தான். வேவு எல்லாம் புர்த்தியாகி விட்டது. மட்டக்களப்பிலிருந்து மேலதிக போராளிகளை அம்பாறைக்கு அனுப்பி வைக்கும்மாறு கருணாவிடம் அன்ரனி கோட்டான். மற்றைய போராளிகளுடன் கருணாவும் சென்றான். இரண்டு தமிழ்த்தேசவிரோத முகாம்களையழிக்க தலைமை தாங்கி அன்ரனி களத்தில் இறங்கினான்.

இந்த இரு முகாம் சன்டையில் வெகுதுரத்தில் நின்று கொண்டு அன்ரனி எங்கு நிற்கிறாய்! என்று கருணா கேட்டான். அதற்கு அன்ரனி சன்டை நடக்கும் முகாமுக்குள்தான் நிற்கிறேன். கருணா உனக்கு பிரச்சனையில்லையா என்று அன்ரனி வேடிக்கையாக வோக்கி டோக்கில் கேட்டான். கருணா வெட்கத்தால் மௌனமானான்.

இச்சன்டையில் தனிப்பட்டரீதியில் கருணா முடிவெடுத்து சரணடைந்த சில தமிழ் தேச விரோதக் குழுக்களைச்சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றான்.அன்ரனி இச்சம்பவத்தை கடுமையாக எதிர்த்தான். சன்டையில் அவர்கள் இறந்ததாக கருணா கதைபரப்பினான்.
இந்த முகாம்கள் அழிப்பில் கைப்பற்றப்பட்ட ஆயத தளபாடங்களை எடுத்துக் கொண்டு செல்லும் போது TNA என்றழைக்கப்பட்ட தமிழ்தேசவிரோதக்குழுக்கள் பதுங்கித்தாக்குலை செய்தனர்.

இச்சம்பவத்தில் கருணா பின்வாங்கி ஓடிவிட்டான். பதில் தாக்குதல் செய்து முறியடித்து தமிழ்தேசவிரோதிகளை பின்வாங்கச் செய்து விட்டு வெற்றிகரமாக ஆயுத தளபாடங்களை அன்ரனி முகாமுக்கு கொண்டு சேர்த்தான். இதில் TNA என்றழைக்கப்பட்ட ராசிக்குழுவினர் நிலை குலைந்தனர். அன்ரனி மீது சகபோராளிகளிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது சகபோராளிகள் அன்ரனியை அன்ரனிக்குயின் என்று பெயர் வைத்து அழைத்தனர். ஆனால் இச்சன்டையை தான் தான் முன் நின்று நடத்தி வெற்றி பெற்றதாக கருணா பெயர் வாங்கினான்.மட்டக்களப்பிலிருந்து IPKF யினர் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டார்கள்.

அம்பாறையில் பின்னடைவைக் கண்ட ராசிக்குழுவினர் மட்டக்களப்பு வடக்கே சத்துரக்கொண்டான் தொடக்கம் கல்லடிப்பாலம்வரை கட்டுப்பாட்டுக்குள்ளாக்கி முகாம்களை அமைத்திருந்தனர். அன்ரனியின் செல்லவாக்கைச்சரியச் செய்ய இதுதான் தருனம் என கனவு கண்ட கருணா தனது படையணியை இறக்கி தன்னாமுனை வரை நகர்த்தினான் ஆனால் சத்துருக்கொண்டானில் ராசிக் குழுவினர் கடுமையான எதிர்ப்பிருந்தது. தன்னாமுனைக்கு மேல் நகரமுடியாமல் கருணாவின் படையணி திண்டாடியது. படுவான்கரைப்பிரதேசங்களான வவுனதீவு, உன்னிச்சை, ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் என்பன ராசிக்குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த பிரதேசங்களாகும்.

அந்த TNA யின் ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வழியாக பங்குடாவெளி வந்து ஏறாவுர் வர முயற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த நகரைத் தக்கவைக்க பங்குடாவெளியில் மதியை கருணா நியமித்தான்(கிரானில் முதல் படுகொலையை கருனாவுடன் சேர்ந்து செய்த மதி) சகபோராளிகளுகுத் தெரியாமல்அவர்களை விட்டு விட்டு மதி தப்பியொடி விட்டான்.

அவ்வேளையில் கருணா தனது மெய்க்காப்பாளர்களுடனும் சில போராகளிகளுடனும் கொம்மாதுறையில் தளமிட்டிருந்தான். பங்குகுடாவெளியில் ராசிக்குழுவினர் வருவதையறிந்த கருணா தனது மெய்க்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு தனது சொந்தக் கிராமமான கிரானுக்குத் தப்பிச்சென்று விட்டான். பங்குடாவெளி வரை வந்த ராசிக்குழுவினரை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் சகபோராளிகளுடன் சேர்ந்து மிக துனிச்சலுடன் கொஞ்ச நிமிடத்திற்குள் பதில் தாக்குதல் செய்து முறியடித்து பின்வாங்க செய்தனர்.

பங்குடாவெளி வந்த ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வரை பின்நோக்கி ஒடி விட்டனர். ராசிக்குழுவினர் பின்வாங்கிய செய்தியை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் கருணாவுக்கு அறிவித்தனார். நீங்கள் கூறுவது உண்மையா எனக் கேட்ட கருணா அதை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் கொம்மாதுறைக்கு வந்து சேர்ந்தான்.

தெல்லிப்பளையை சேர்ந்த மேஜர் அபயனுக்கும் ரம்போ பிரசாத்திற்கும் கருணா செய்த துரோகங்கள் என்ன என்னென்று இத்தொடரில் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இது இவ்வாறு இருக்க இரண்டு நாட்களாகியும் தான்னாமுனையிருந்து கருனாவின் படையனியால் முன்னேற முடியவில்லை! மட்டுநகரை ஏன் உங்களால் இன்னுமும் பிடிக்க முடியவில்லை! என்ன காரணம்? என்று தலைவர் கருணாவுடன் தொடர்பு கொண்டு கேட்டார். கருணாவுக்கு இது பெருத்த அவமானமாகயிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களையும் தளபதிகளையும் பலமைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டே தொலைத்தொடர்பில் தொடர்பு கொண்டு கருணா காரணம் கேட்டானான். ஆதற்கு அவர்கள் அன்ரனி இருந்திருந்தால் எப்போதே பிடித்திருப்போம் என்றும் அன்ரனி இங்கு வரவேண்டும் என்றும் எல்லோரும் விரும்பினர்.

அந்நேரம் தலைவர் தன்னை பிழையாக விளங்கிகொள்வார் என நினைத்த கருணா அன்ரனியை அம்பாறையிருந்து உடன் வரும்படி அறிவித்தான். அன்ரனி என்ற வீரத்தளபதி வருகின்றான் என்பதை அறிந்து கொண்ட ராசிக்குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது முட்டை முடிச்சுகளைக்கட்டி மட்டுநகரை விட்டு ஒடத் தொடங்கினர். அன்ரனியால் முற்றுமுழுதாக மட்டு நகர் மீட்கப்பட்டது.ஆனால் மட்டு நகரை தான் வெற்றிகொண்டு மீட்டதாக கருணா கதையளந்தான்.

பளுகாமத்தில் ராசிக்குழுவினரின் முகாமைத் தாக்கும் போது கொக்கட்டிச்சோலையிருந்து சக ராசிக்குழுவினரின் உதவி கிடைக்கும் என்று கொக்கட்டிச்சோலை அம்பலத்தடியில் மேஜர் றோபேட் தலைமையில் கட்அவுட் போடப்பட்டது. இவ்வேளையில் குறுமன்வெளியைச்சேர்ந்த தாசன் என்ற போராளி ராசிக்குழுவின் முகாமைப்பார்க்கச் சென்றார். ராசிக்குழுவினர் ஆயுததளபாடங்களை வாகனங்களில் ஏற்றி வைத்துவிட்டு ஏற்கனவே தப்பி சென்று விட்டனர்.தாசன் கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைத்து விட்;டு ஆயுதங்களை வாகனத்தில் கொன்டு வந்து சேர்த்தான்.இதை வெகுதெலையிருந்து அவாதனித்த கருணா ராசிக்குழுவின் முகாமை தகர்த்து பெருமளவு கனரக ஆயுதங்களை தான் கைப்பற்றியதாக எல்லாருக்கும் பிரச்சாரம் செய்தான். ஆனால் இந்த தாசனுக்கு கருணவால் செய்யப்பட்ட கொடுமைகள் பல.. பல இந்த தாசன் தற்போது எங்கு எந்த நிலையில் வாழ்கின்றான் என்று தெரியாது!

ராசிக்குழுவினரின் பளுகாமம் முகாம் கைப்பற்றப்பட்டு செய்தி கேட்டு மற்றய TNA யினர் முன்னேறி வந்தனர். 1989ல் இச் சம்பவம் நடந்தது மேஜர் றேபேட்டுடன் 6 போராளிகளும் பரந்த வெளியில் பகலில் ராசிக்குழுவினருடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டியிருந்தனர். அப்போது அவர்களின் ரவை முடிந்து விட்டது. கருணாவிடம் உதவியும் ரவையும் கேட்டனர். கருணா பதில் கூறவில்லை! இறுதிவரை போராடினோம் ரவை முடிந்து விட்டது! ஆனால் சரணடையமாட்டேம் என்று இறுதியாக தொலைத்தொடர்பு சாதனத்தில் பேசி சயனைட் அருந்தி மேஜர் றோபேட் மற்றும் கொம்மாதுறையைச் சேர்ந்த வேனு உட்பட 6 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதே நேரம் 3 கிலோ மீற்றருக்குள் 300 பேருடன் கருணா என்ற நயவஞ்சகன் இருந்தான் என்பது குறிப்பிடதக்க விடயம்.

ஆனால் அந்த 6 மாவீரர்களின் புகழுடலைக்கூட கருணாவால் எடுக்க முடியவில்லை! மாறாக மேஜர் அபயனனையும் தாசனையும் வீண் பழிசுமத்தினான் கருனா! இதனால் மனமுடைந்த தாசன் இயக்கத்தை விட்டே வெளியேறினான். இச்செய்தியை அறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்.
தொடரும் …

வாழ்க தமிழ்த் தேசியம்.

திரு.கருனா அம்மான் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதோடு தமிழ்த் தேசியத்திற்கு பாரிய துரோகத்தை செய்து விட்டு சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலியா மாறி இன்று நடைபிணமாக மரணத்தின் விழிம்பில் நின்று விம்மி விம்மி அழுத வண்ணம் இருக்கின்றார்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கருனா அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதியாக இருந்து வேளை சமாதான காலத்தை அடுத்து வெளிநாடுகளுக்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.
வெளிநாடுகளுக்கான பயணத்தின் போது அவருக்கு இருந்த தாய் மண் மீதான பற்று படிப்படியா குறைந்து காலப் போக்கில் பெண் ஆசை , பொன் ஆசை மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் வளரத்தொடங்கியது.

மனைவி மீது அளவு கடந்த பற்று கொண்டதால் விடுதலைக்காக கொடுக்கபட்ட குறிப்பிட்ட தொகை இலட்சம் ரூபாக்களை தனது மனைவியின் செலவுக்காக கொடுத்திருந்தார். குறிப்பாக மனைவி மலேசியா செல்ல புறப்பட்ட சமயம் பயுறோ வாகனத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்கின்றார். அதே இடத்திற்கு கானாவோடு இரு போராளிகளும் செல்கின்றனர். குறிப்பிட்ட இடத்தில் மனைவியின் பயுறோ வாகனம் தரித்து நிற்க அதே இடத்தில் கானாவின் பயுறோ வாகனமும் படு வேகமாக வந்து தரித்தது.

உடனடியாக பயுறோ வாகனங்களின் பின்புற கதவுகள் திறக்கபட்டன. அந்த இடைவெளியில் ஒரு சூட்கேஸ் கானாவால் திறந்து பார்க்கபட்டு தனது ஆசை மனைவிக்கு அந்த பணப் பெட்டியை தானம் செய்கிறார். அங்கே தான் கருனா அம்மான் தமிழர் தாயகத்திற்கும். தமிழர் தேசியத்திற்கும், தேசியத் தலைவனுக்கும், தமிழ் மக்களுக்குமான முதலாவது துரோகத்தை இழைக்கிறான.சூட்கேசினை கருனா அம்மான் திறந்து பார்க்கும் போது கம்சன் என்ற போராளி சூக்கேசினுள் இருந்த குறிப்பிட்ட இலட்சம் ரூபாக்களை பார்த்து விட்டான். கனாவின் துரோகச் செயலை அவனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்சன் ஊடனடியாக கருனா அம்மானின் வாகனச் சாரதிக்கு இரகசியமாக தகவலைத் தெரிவிக்கின்றான்.

பாவம் கம்சன் வாகனச் சாரதியோ கருனா அம்மானின் நெருங்கிய விசுவாசி. இதனை கம்சன் எந்தவொரு காலத்திலும் அறிந்திருக்கவில்லை. வாகனச்சாரதியோ விசயத்தை காதும் காதுமாக கருனா அம்மானிடம் தெரியப்படுத்தினான்.விசயம் அறிந்த கருனா அம்மான் இந்த விசயம் இயக்கத்திற்கு தெரிந்தால் அமைப்பில் சுடப்போகிறார்களே என்று அச்சி மண்டை எல்லாம் குழம்பிப் போய், என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நிலை தடுமாறி நின்ற சமயம் கம்சன் என்ற போராளி தனது நிதிப் பொறுப்பாளரிடம் கானா அம்மானின் நிதி மோசடியை விரிவாகத் தெரிவித்தான். நிதித்துறைப் போராளியோ தகவலை எடுத்துகொண்டு வன்னி சென்று தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவிக்கின்றான். (தொடரும்)

தமிழீழத் தேசியத் தலைவரிடம் கருணா அம்மானின் நிதி மோசடி தொடர்பான விடயங்களை விளக்கமாக தெரிவித்த அந்த நிதித்துறைப் போராளி. தமிழீழ தேசியத் தலைவரால் அந்த நிதித்துறைப் போராளி கருனாவின் நிதி மோசடி தொடர்பாக மட்டக்களப்பு தேனகம் சென்று மீண்டும்; ஒரு முறை உறுதிப்படுத்துமாறு பணிக்கப்படுகிறார்.இதற்கிடையில் தமிழீழத் தேசியத் தலைவர் கருனாவுடன் தொலைத் தொடர்பு கருவி மூலம் தொடர்பை ஏற்படுத்தி கருனா உன்மீது ஒரு சில முறைப்பாடுகள் வந்துள்ளன. அதை தெளிவுபடுத்த வன்னி வருமாறு அன்பாக அழைக்கப்பட்டார்.
நிதி மோசடி தொடர்பான விடயங்கள் ஏதோ ஒரு வகையில் தமிழீழத் தேசியத் தலைவருக்கு தெரிந்து விட்டதை அறிந்த கருனா வருவதாக அறிவித்து விட்டு அக்காலப் பகுதியை மட்டக்களப்பில் தன்னை பலப்படுத்தும் நடவடிக்கையில் கருனா ஈடுபட்டார்.

இத்தருணம் கருனாவின் நிதிமோசடி தொடர்பான விடயம் அறிந்த சாட்சியாக கம்சன் என்ற போராளியே இருந்தான். அந்த சாட்சியை எப்படியும் கொல்லவேண்டும் என்று கருனா படுமுயற்சிகளை மேற்கொண்டிருந்த சமயம் கம்சன் என்ற போராளிக்கு மலேரியா காய்ச்சல் வந்து விட்டது. வழமையாக காய்ச்சல் மற்றும் நோய்கள் வரும்போது விடுதலைப் புலிகளின் மெடிக்ஸில் தங்கி நின்று வருத்தத்தைக் குணப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் கம்சன் என்ற போராளியும் விடுதலைப் புலிகளின் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுகிறார். மருத்துவ மனையில் தங்கியிருந்த கம்சனுக்கு மருத்துவர்களில் ஒருவர் கருனாவின் அன்புக்குரிய தீவிர விசுவாசி. அந்த மருத்துவ போராளியை கருனா அனுகி அப்போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டத்தை கருனா போடுகிறார்.

இந்த கொலைச் சதித்திட்டத்தை மிக இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த விடயம் வெளியில் தெரியும் பட்சத்தில் மருத்துவப் போராளியை கொன்றுவிடுவதாகவும் கருனா விரட்டியுள்ளார். இதற்கமையவே இருவருமாகச் சேர்ந்து கம்சன் என்ற போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

நிதித்துறைப் போராளி தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவித்து விட்டு வருவார் என எதிர்பார்த்திருந்து கம்சனுக்கு சாவு மிக அருகில் வந்துகொண்டிருந்தது.

கருனாவும் அந்த மருத்துவ போராளியுமாக இணைந்து மலேரியா நோயில் பீடிக்கப்பட்ட கம்சனுக்கு மருத்துடன் மருந்தாக விச ஊசியை ஏற்றி கொல்வதே இருவருடைய கொலைத் திட்டமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவப் போராளி கம்சனுக்கு விச ஊசியை ஏற்றி கொலை செய்கிறான்.

கருனாவுக்கு சற்று நின்மதி இருந்த சாட்சியை ஒருவாறு கொலை செய்விட்டாச்சு. அடுத்து கொலை செய்யப்பட்ட போராளியை எப்படி இயற்கை சாவாக மாற்றுவது மற்றவர்களை எப்படி நம்ப வைப்பது என சிந்திக்கிறார். (தொடரும்)

போராளி கம்சனோ கருணா நினைத்தது போல் கொலை செய்யபட்டுவிட்டார். கருணாவுக்கு அத்திட்டத்தில் வெற்றி. கம்சனின் கொலையை இயற்கைச் சாவாக புலிகள் அமைப்புக்கு தெரியப்படுத்தியதிலும் கருணாவுக்கு வெற்றியே.போராளி கம்சனின் சாவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட போராளிகளுக்கான போர்ப் பயிற்சி நடந்த காலமும் ஒன்றே. சீறீலங்கா அரசுடன் மீண்டும் 4ம் கட்ட ஈழப்போர் தொடங்கும் அரசியல் சூழலாக இந்த காலமும் அதுவே.இதற்காக கிழக்கு மாகாண போராளிகள் அனைவருக்கும் விசேட போர்ப் பயிற்சிகள் வழங்குவதற்காக தளபதிகள்,பொறுப்பாளர்,போராளிக
ள், முகாம்களில் தங்கியிருந்து வெளியே செல்லாது பயிற்சிகளில் ஈடுபட்ட காலம். இத்தக் காலத்தையே கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
போராளி கம்சனின் சாவை இயற்கைச் சாவாக மருத்துவப் போராளி ஊடாக ஏனைய போராளிகள் மத்தியில் பரப்புரை செய்தார். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திற்கும் கம்சனின் சாவு இயற்கைச் சாவாக அறிவிக்கப்படுகிறது. இதிலும் கருணாவுக்கு கணிசமான வெற்றியை தனது பக்கம் சேர்த்துக் கொண்டார்.

கம்சனின் இறுதி வீரவணகத்திற்காக கிழக்கு மாகாண தபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவருமாக மாவீரர் துயிலுமில்லத்தில் காத்திருந்தார்கள். கருணாவோ இறுதி வீரவணக்திற்காக துயிலுமில்லம் வருகை தருகிறார். துயிலுமில்லம் வந்த கருணா அங்கே தனிமையத் தேடுகிறார். ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகளுடன் சுமூகமாகப் பழகும் கருணா அன்று எதனையோ இழந்தது பறிகொடுத்தது போல் காணப்பட்டார்.

தளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் போராளிகளுடன் கதைக்காமல், ஓராமாக நின்று, தனிமையில் இருந்து, அழுதவண்ணம் இருந்தார். என்னடா…? கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ போராளிகள் இந்த தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த போதும் அப்போராளிகளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வடிக்காத கருணா கம்சனின் சாவுக்கு கண்ணீர் வடிக்கிறாரே என அவருடன் நீண்ட காலமாக இருந்து வாழ்ந்த மூத்த போராளிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது கருணாவின் சதி முயற்சியை விடுதலைப் போராளிகளால் உணரக்கூடிய திருப்புமுனைச் சம்பவமாக அது அமைந்தது.

இதற்கு இடையில் வன்னி சென்று தேசியத் தலைவருக்கு கருணாவின் 35 இலட்சம் இலங்கை ரூபா நிதி மோசடி செய்த விடயத்தை தெரியப்படுத்திவிட்டு மேலதிக தகவல்களை திரட்டி உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டம் திரும்பினார் மட்டக்களப்பு நிதிப் பொறுப்பாளர்.

மட்டக்களப்பு சென்ற நிதிப் பொறுபாளருக்கு கம்சனின் சாவும் கருணா மீது இருந்து சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதனை அடுத்து தமிழீழ தேசியத் தலைவரால் கருணாவுக்கு செற் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது…..

தலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பததை நன்கே அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியா தீர்வு என வலியுறுத்துகிறார்.
பிரதேச வாதத்தை முன்வைத்து கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார். கிழக்கு மாகாண போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததினால��
� கருணாவின் துரோகச் செயலலை உடனே அறிந்து கொள்ள வாய்ப்பே இருக்கவில்லை.

போராளிகள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமை சமயத்தைப் பாவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போராளிகளின் வைத்திருந்து தொலைபேசிகள் மற்றும் வானொலி என்பன கருணாவினால் வாக்கப்பட்டன. போராளிகளுக்கு வெளித் தொடர்பு இருக்கவில்லை வெளியுலகமும் தெரிவில்லை.

எல்லோரும் பயிற்சியில் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். பயிற்சி முகாமுக்கு தீடிரென வருகை தந்த கருணா போராளிகளை கலந்துரையாடலுக்காக அழைக்கின்றார்கள். தேசியத் தலைவர் நேரடியாக தென்தமிழீழத்தை நேரடியாக வழிநடத்துவதாகவும் எம்மை விடுதலைப் புலிகளின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஊடாக செயற்படாமல் தனது நேரடிக் கண்காணிப்பில் செயற்படுமாறு தலைவர் பணித்துள்ளார் என போராளிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கருணா தெரியப்படுத்துகிறார்.

போராளிகளுகளோ கருணாவின் கூற்றை சந்தேசத்துடன் நோக்குகின்றனர். கருணாவின் விசுவாசிகளாக இருந்துவந்த போராளிகளுக்கு மட்டுமே கருணாவின் பிரிவினை தெரிந்திருந்தது. போராளிகள் பயிற்சி ஈடுபட்டிருக்கின்ற வேளை கருணா தன்னை மிக விரைவாக பலப்படுத்துகின்றார்.

அமைப்பிலிருந்து கலைக்கப்பட்டவர்களையும் தேசத்துரோகத்தில் கைதிகளாக அடைக்கப்பட்டவர்களுக்கும் மீள்வாழ்வு தருவதாகவும் தன்னுடன் சேர்ந்து இயங்குமாறும் கருணாவால் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மரணத்தை ஏற்க மறுத்த இவர்கள் கருணாவுடன் இணைகின்றனர். அதுமாத்திரமல்ல ஜெயசிக்குறு சண்டையில் களம் ஆற்றிய தளபதிகள் சிலர் கருணாவின் சதிவலையில் அகப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரது பலத்தை நம்பி கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். பிரதேசவாத கருத்துக்களை முன்வைத்தார். தமீழத்திலும் உலகக்பரப்பிலும் கருணாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் கை ஒன்று கால் ஒன்றாக உருப்பெருத்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தின.

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இது உண்மையா நம்புவதாக என்ற பல்வேறு கேள்விக் கணையுடன் எல்லோருமே குழம்பிப் போயினர். கிழக்கு மாகாண மக்களும் எதை செய்வது என்ற செய்வது என்பது தெரியாமல் திசைமாறியபடியே குழம்பினர். இதற்குள் விதிவிலக்காக கிழக்கு மாகாண போராளிகள் மத்தியில் கருணாவின் அறிவிப்பு தெரியவரவில்லை. போராளிகள் பயிற்சியில் கூடிய கவனம் செலுத்தினர்.

வானொலிகளோ, தொலைபேசிகளோ, தொலைத் தொடர்பு சாதனங்களோ, மக்கள் தொடர்புகளோ, ஊடக தொடர்பு சாதனங்களோ எதுவுவே இல்லாத நிலையில் கருணாவின் துரோகத்தனத்தை போராளிகளே பொறுப்பாளர்களோ அறிய வாய்பே இருக்கவில்லை.

ஒரு சில நாட்களில் தளபதிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் கருணாவின் பிரிவினை பற்றிய கருத்து தெரியவருகிறது. பொறுப்பாளர்களும் தளபதிகளும் என்னசெய்வதறியாது தடுமாறிய நிலையில் இருக்கின்றனர்.

இங்கு குறிப்பிடப்படும் மனிதனைபற்றி – இனியும் பேசுவது- நேரவிரயம்!

பொதுவாக சிலாகிக்க படுவதுபோல் – கருணா – ஒன்றுமே எம் போராட்டத்தில் – பெரிதாய் பங்களிப்பு வழங்கவில்லை – என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை!

கருணா – கால்நடையாகவே – ஆயிரக்கணக்கான – போராளிகளுடன் வன்னி நிலம் மீட்க – கால் நடையாய் – சென்ற தளபதிதான் – பொய்யில்லை !

என் கோபமெல்லாம் – இத்தனையும் செய்த மனிதன் – கடைசியில் –
ஏன் இவ்ளோ பித்தலாட்டம் செய்தான் என்பதே!

இன்றைக்கும் பலருக்கு நினைவிருக்கலாம் – பிரதேசவாதம் பேசி –

தன்னை காப்பாற்றிகொள்ள – முயன்ற – இந்த நபர்- தலைவரை – ‘ கடவுளாய் நினைக்கிறேன்’ என்று சொன்னதுதான்!

SHARE