சிங்களத்தில் தற்போது தலைமை தாங்கும் ரணில் விக்ரமசிங்கவினுடைய கடந்த காலத்தை எடுத்து பார்த்தால் அவர் தமிழ் மக்களை பிளவு படுத்துவதின் மூலமாக தன்னுடைய சிங்கள நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதனை காண முடிந்தது.
கடந்த பேச்சுவார்த்தை காலத்தின்போது கருணாவை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரித்தெடுத்தார்.
அதே போன்று தற்சமயம் ஒரு பிரித்தாளும் தந்திரத்தை தான் சிங்களவர்கள் மேற்கொள்கின்றார்கள்.
ஆனால் புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டுடனும் எங்களுக்குள் பரஸ்பர புரிந்துணர்வுடனும் கட்டாயம் இருக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்தார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டார்.