கரும்புலிகள் தினம் தொடர்பாக தென்பகுதியில் வெளியாகிய கருத்துக்கு மறுப்பறிக்கை

178
கரும்புலிகள் தின அஞ்சலி நிகழ்வுக்கு அரசினால் தடை விதிக்கப்படவும் இல்லை அது தொடர்பான எந்தவித சுற்றறிக்கையும் அரசு வெளியிடவும் இல்லை என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா.
கடந்த 05-07-2018.அன்று வடக்கு கிழக்கில் இடம் பெற்ற கரும் புலிகள் தின அஞ்சலி நிகழ்வின் பின்  தெற்கில் சில சிங்கள இனவாதிகளால் பரப்பப்படும்  இனவாத அறிக்கைகளுக்கு பதிலாக  பல விமர்சனங்கள் வெளியாகியுள்ளன இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

1-கரும் புலிகள் தின அஞ்சலி நிகழ்வுக்கு அரசினால் தடை விதிக்கப்படவும் இல்லை அது தொடர்பான எந்தவித சுற்றறிக்கையும் அரசு வெளியிடவும் இல்லை.

2-இந்த நிகழ்வு இரகசியமாக செய்யப்பட்ட ஓன்று இல்லை பகிரங்கமாகவே பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னத்தில் அவர்களின் முன்னிலையிலேயே இடம் பெற்றது.

3-கரும்புலி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்தவித பயங்கரவாத செயலும் அல்லது அது தொடர்பான எந்தவித ஊக்குவிப்பும் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

4-அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் என்னும் கட்சின் என்ற வகையில் நான் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினேன் இநத நிகழ்வுக்கு போலீசார் பாதுகாப்பு தர முன்வந்தனர் நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

5-போராளிகளாக இருந்த நாங்கள் ஜனநாயகரீதியாக புனர்வாள்வுபெற்ற அனைத்துப் போராளிகளையும் உள்ளடக்கி ஆயுதப் போராட்டத்தை முற்று முழுதாக நிராகரித்து அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க தேர்தல் திணைக்களத்தில் முன் பதிவு செய்துள்ளேன்.

தற்போது தெற்கில் இருந்து இனவாதக் கருத்துக்களைப் பரப்பி சிங்கள மக்களுக்கு தவறான கருத்துக்களை பகிரங்கப்படுத்தி மீண்டும் ஒரு தமிழ் சிங்கலமொதலை உருவாக்கி தற்போதைய நல்லிணக்க அரசின் செயல் திட்டங்களை நிலைகுலைய வைப்பதும் தங்களின் சுயநல அரசியலுக்காக அரசியல் வங்குரோத்து நிலையை செய்ய நினைக்கும் சரத் பொன்சேகா.விமல் வீரவங்கச போன்றோரை முதலில் கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.

நாங்களும் இநத நாட்டின் குடிமக்கள் இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும் ஒழுங்கும் எப்படி சீர் கெடும் நாங்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் .மேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை தெற்க்கில் உள்ள சிங்கள மக்கள்தான் பதில் கூறவேண்டும்

மேலும் மேலும் எங்களை சட்ட ஒழுங்கை சீர் குலைப்பவர்கள் பயங்கரவாதத்தை உருவாக்குகின்றார்கள் என்று தொடர்ந்தும் இவர்கள் கூறுவார்களானால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் திம்பு முதல் ஜெனிவா வரை 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொண்ட அனைவருமே பயங்கரவாதிகள் தானே அவர்களையும் கைது செய்ய வேண்டுமே.

நானும் எனது கட்சியின் உறுப்பினர்களும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இடம் பெறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதைப் பதிவு செய்ய விரும்புகின்றேன் அதனால் ஜனநாயக ரீதியான  அரசியலில் களமிறங்கியுள்ளோம் என்பதை பகிரங்கமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரங்கப் படுத்துகின்றேன். என தனதறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE