கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக சுட்டுக் கொன்ற பொலிஸ்

227

625-500-560-350-160-300-053-800-748-160-70-4

அமெரிக்காவில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை பொலிசார் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் வாழும் Muckleshoot என்ற பகுதியில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியில் ரெனி டேவிஸ்(23) என்ற 5 மாத கர்ப்பிணி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்பகுதி பொலிசாருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

ரெனி டேவிஸ் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவர் ‘ரெனி டேவிஸ் மிகவும் மன உளைச்சலில் உள்ளதாகவும், துப்பாக்கி வைத்துக்கொண்டு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துக்கொள்வதாகவும் அவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக ரெனி டேவிஸ் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

வீட்டை சுற்றி வளைத்த பொலிசார் உள்ளே என்ன நடக்கிறது என்பதை கண்காணித்துள்ளனர்.

அப்போது, 5 மாத கர்ப்பிணியான ரெனி டேவிஸ் தனது இரண்டு பிள்ளைகள் முன்னிலையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு அழுதுக்கொண்டு இருந்துள்ளார்.

மன உளைச்சலில் பிள்ளைகளுக்கு ஆபத்து எதுவும் நிகழக்கூடாது என்ற நோக்கத்தில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த பொலிசார் சரமாரியாக சுட்டுள்ளனர்.

இதில் பல இடங்களில் குண்டு காயம் அடைந்த ரெனி டேவிஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். குழந்தைகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.

எனினும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த உயர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE