வடக்கு மாகாணசபையின் 2015 ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையினூடாக தனக்கொதுக்கப்பட்ட நிதியிலிருந்து கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மூவருக்கு கோழிக்கூடுகளும் குஞ்சுகளும் வழங்கப்பட்டன. சுயதொழில் முயற்சியினை ஊக்குவிக்கும் நோக்கில் இவை வழங்கப்பட்டுள்ளன.
கோப்பாய் பூதர்மடம் சந்திக்கருகாமையில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தில் இக் கையளிப்பு நிகழ்வு இன்று(22.08.2015) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.