கலாபவன் மணியின் மரணம் சினிமாவிற்கு ஒரு ஈடுகட்ட முடியா இழப்பாகும். இந்நிலையில் கலாபவன் மணிக்கு திருவனந்தபுரம்அருகே ஆற்றிங்கல் மாமம் என்ற இடத்தில் அவரது ரசிகர்கள் அமைப்பான கலாபவன்மணி சேவா சமிதி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கலாபவன்மணியின் உருவபடத்தை அணையாவிளக்குடன் அமைத்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் அவரது சகோதரர் மற்றும் பல பிரபலங்கள், எராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.